Monday, November 2, 2009

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

நேற்று போல் இன்று இல்லை
என்று வியந்தேன் !
இன்று போல் நாளை இருப்பதில்லை
என்பதை உணர்ந்தேன் !!

தடைகள் தடுமாற வைக்கும் ,
சிலர் நம்மை முதுகினில்
தட்டியும் கொடுப்பார்கள்;
தட்டியும் விடுவார்கள் !
முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;

ஒற்றை வாழ்வினை சற்றே
வாழ்ந்து தான் பார்ப்போமே !

வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து
அதன் வேட்க்கையை என்றும்
நம் நினைவில் வைத்து
உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

Tuesday, August 25, 2009

வாழ்க்கையே கொண்டாட்டம்

எனக்கே என்னை பிடிக்கவில்லை;

உனக்கு என்னை பிடிக்கும் வரை !

வாழ்வில் என்ன செய்வது என்றிருந்தேன் ,

உன்னை காதலிக்க வைத்தாய் !



வாழ்வில் அழகை ஆராதிக்க ஆராய்ந்திருந்தேன் ;

பல்கலைக் கழகமாய் என்னை வந்தடைந்தாய் !

இனி ஆராய்ச்சி தான் எதற்கு ?

உன்னை ப‌டிப்ப‌தெத‌ற்கு பார்த்தே

தெரிந்து கொள்கிறேன் !



நான் கண்ட ஒரே பெண் நீ தான் !

என்று பொய் உரைக்க போவதில்லை ;

நானும் பலரை கண்டதுண்டு

காதலித்ததும் காதலிப்பதும் உன்னை மட்டுமே !



கொண்ட காதலினை நிரூபிப்பது கடினமே !

நான் செய்வேன் , என் வாழ்நாளினை

உன்னுடன் வாழ்ந்து கொண்டாடி !



ஆம் ! நீ என்னுடன் இருக்கையில்

அனுதினமும் கொண்டாட்டமே !!!



என் வாழ்க்கையே கொண்டாட்டம்,

கொண்டாடுகிறேன் !!!

Friday, August 21, 2009

ஏக்கம் !!!

என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைந்தேன் !
உன்னை சந்தித்தபின்
சிந்திக்க ஏதடி நேரம் ?
உன் நினைவுகள் புதைந்ததனால்
சிதைந்தது என் மூளை !

இன்றும் ,
என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைகிறேன் !
ஆம்! உன்னை சந்திக்கும் நேரம்
மறுபடியும் வராதா ?
என்று ஏங்கியே !

Wednesday, August 5, 2009

களவாடிய பொழுதுகள் !!!

சில சில்லறைகள் களவாடிய போது
பதறியது நெஞ்சம்,
சுற்றியுள்ள உலகத்தை நினைத்தே !
உன்னை களவாடி
என்னுள் வைத்த பின்
பதற்றம் ஏதடி ?
என் உலகம் நீயான பின் !!!

Sunday, July 19, 2009

அறிதல்

காதலித்தால் ,
உன்னை நீ அறிவாய் ;
தோற்றால் ,
வாழ்வையே நீ அறிவாய் ! ! !

Tuesday, July 14, 2009

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !

காத்திருந்தேன் ,

காத்திருக்கிறேன் ,

காத்திருப்பேன் !

என்ற நம்பிக்கையில் தானோ,

நான் சிரித்த போது

முகம் காட்டாதவள்,

என் கல்லறையில் கண்ணீர் சிந்துகிறாள் !

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !

Friday, July 10, 2009

வெற்றிடம்

என் கண்கள்,
உன்னை கொள்ளை கொண்டதும்
என் இதயம் வெற்றிடம் ஆனதே !
பதறவில்லை நீ நிரப்புவாய் என்பதால் ;