Monday, November 2, 2009
உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!
என்று வியந்தேன் !
இன்று போல் நாளை இருப்பதில்லை
என்பதை உணர்ந்தேன் !!
தடைகள் தடுமாற வைக்கும் ,
சிலர் நம்மை முதுகினில்
தட்டியும் கொடுப்பார்கள்;
தட்டியும் விடுவார்கள் !
முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;
ஒற்றை வாழ்வினை சற்றே
வாழ்ந்து தான் பார்ப்போமே !
வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து
அதன் வேட்க்கையை என்றும்
நம் நினைவில் வைத்து
உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!
Tuesday, August 25, 2009
வாழ்க்கையே கொண்டாட்டம்
எனக்கே என்னை பிடிக்கவில்லை;
உனக்கு என்னை பிடிக்கும் வரை !
வாழ்வில் என்ன செய்வது என்றிருந்தேன் ,
உன்னை காதலிக்க வைத்தாய் !
வாழ்வில் அழகை ஆராதிக்க ஆராய்ந்திருந்தேன் ;
பல்கலைக் கழகமாய் என்னை வந்தடைந்தாய் !
இனி ஆராய்ச்சி தான் எதற்கு ?
உன்னை படிப்பதெதற்கு பார்த்தே
தெரிந்து கொள்கிறேன் !
நான் கண்ட ஒரே பெண் நீ தான் !
என்று பொய் உரைக்க போவதில்லை ;
நானும் பலரை கண்டதுண்டு
காதலித்ததும் காதலிப்பதும் உன்னை மட்டுமே !
கொண்ட காதலினை நிரூபிப்பது கடினமே !
நான் செய்வேன் , என் வாழ்நாளினை
உன்னுடன் வாழ்ந்து கொண்டாடி !
ஆம் ! நீ என்னுடன் இருக்கையில்
அனுதினமும் கொண்டாட்டமே !!!
என் வாழ்க்கையே கொண்டாட்டம்,
கொண்டாடுகிறேன் !!!
Friday, August 21, 2009
ஏக்கம் !!!
நேரம் இல்லாமல் அலைந்தேன் !
உன்னை சந்தித்தபின்
சிந்திக்க ஏதடி நேரம் ?
உன் நினைவுகள் புதைந்ததனால்
சிதைந்தது என் மூளை !
இன்றும் ,
என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைகிறேன் !
ஆம்! உன்னை சந்திக்கும் நேரம்
மறுபடியும் வராதா ?
என்று ஏங்கியே !
Wednesday, August 5, 2009
களவாடிய பொழுதுகள் !!!
பதறியது நெஞ்சம்,
சுற்றியுள்ள உலகத்தை நினைத்தே !
உன்னை களவாடி
என்னுள் வைத்த பின்
பதற்றம் ஏதடி ?
என் உலகம் நீயான பின் !!!
Sunday, July 19, 2009
Tuesday, July 14, 2009
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !
காத்திருந்தேன் ,
காத்திருக்கிறேன் ,
காத்திருப்பேன் !
என்ற நம்பிக்கையில் தானோ,
நான் சிரித்த போது
முகம் காட்டாதவள்,
என் கல்லறையில் கண்ணீர் சிந்துகிறாள் !
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !
Friday, July 10, 2009
வெற்றிடம்
உன்னை கொள்ளை கொண்டதும்
என் இதயம் வெற்றிடம் ஆனதே !
பதறவில்லை நீ நிரப்புவாய் என்பதால் ;
