திங்கள், 23 ஜூன், 2008

பைத்தியக்காரானா ? அதிர்ஷ்டக்காரானா ?

மறதிக்காரன் ! என்று திட்டிக்

கொண்டிருந்தனர் ; ஆம் கடைக்கு

சென்று வாங்கி வர சொன்ன

இரு பொருளில் ஒன்றை மறந்ததால் !

ஆனால் இன்று பைத்தியக்காரன்

என்கின்றனர் ! உன்னிடம் என்னை

மறந்ததால் ; நானோ

அதிர்ஷ்டக்காரன் என்கிறேன் !

என்னை தந்து உன்னை பெற்றதால் !

படைப்பாளிகள் !

நாம் உண்ணும் உணவிலே

நம் பெயர் எழுதி இருக்குமாம் !

அப்படி இருக்கையில் நமக்கென்று

ஒரு பெண் இல்லாமலா போய்

விடுவாள் ; பிறகு என்ன கவலை

பிரம்மச்சாரிகளே ! நாம் பிரம்மனின்

செல்ல பிள்ளைகள் ஆம் !

சந்தோஷத்தை படைக்கும்

படைப்பாளிகள் !

பிரம்மச்சாரிகள் !

உலகத்தில் பிரம்மன் தன்
படைப்பால் செய்த
தவறுகளுக்கு சொன்ன
Sorry தான் பிரம்மச்சாரிகள் !
வாழ்க்கையை வாழ்ந்து
தான் பார்ப்போம் !

நிழல்

நம்மையும் நம் நிழலையும்
என்றும் பிரிக்க முடியாது ;
ஆனால் மறைய வைக்கலாம் ! ஆம்
பகலில் காணலாம் ; சிறு ஒளியும்
இல்லா இரவினில் எப்படி ?
ஆனால் என் நிழலை
காணலாம் ஆம் ! என் நிழல்
நீ அல்லவா ! உன்
நிலவு முகத்தை மறைய
வைப்பது எப்படி சாத்தியம் ?