திங்கள், 10 நவம்பர், 2008

வார்த்தை

நாணயத்தின் இரு பக்கங்கள்

போலத் தான் இரு முகம் கொண்டது , காதல் !

வென்றவரும் , சென்றவரும் ,

ஏனெனில் தோற்பவன் இல்லை !

காத்திருக்க முடியாமல் சென்றவன் தான் !

அப்படி சென்றவன் (தோற்றவன்) இருப்பின் ,

இதோ !

அவனது வரிகள் ,

உன்னை என் வாழ்க்கை புத்தகத்தில்

பக்கங்களாக்க கருதினேன் , நீயோ

ஒரு பாடமாக இருக்கிறேன்

என்று நழுவிவிட்டாய் !

இதோ !

வென்றவன் வரிகள் ,

அவருக்கு ஏது வரிகள் ,

வார்த்தை தான் ' வாழ்வோம் '

என்ற சொல் !