செவ்வாய், 23 செப்டம்பர், 2008

சிந்தனை

சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன் !

புலவர்கள் திறமைகள் பல பெற்றும்

வறுமையினால் யாசிக்கின்றனர் !

நான் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி இல்லை ;

என் வீட்டிற்கு நானே ராஜா !

இருந்தும் யாசிக்கிறேன் ,

வேறு யாரிமும் இல்லை உன்னிடம் தான் !

வறுமையினாலா ? இல்லை ,

மன வெறுமையினால் !

என் மனதில் நிரம்புவாயா ?

திங்கள், 15 செப்டம்பர், 2008

அனுபவம்

அனுபவம் தான் நம்மில் ஆண்டவனை

அவதரிக்க செய்யும் என்று

அறிவுறுத்தினாய்; காதல் அனுபவம்

இல்லை என்றிருந்தேன் ,

அதனை போக்கவே தான் காதலை

அனுபவிக்கவிட்டு பிரிகிறாயா ?

இனி ஒரு போதும் பெற மாட்டேன்

இந்த அனுபவத்தை !

திங்கள், 8 செப்டம்பர், 2008

நினைவுகள்

நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !

அவர்கள் உன்னை நினைப்பதை பற்றி
நீ நினைத்ததும் இல்லை !
நினைக்க போவதும் இல்லை !!

நீ என்னை பற்றி நினைத்திருக்க மாட்டாய் ,
நீ ஏன் என்னை நினைக்கவில்லை ,
என்பதனை பற்றி நான் சிந்தித்ததும் இல்லை !
சிந்திக்க போவதும் இல்லை ;
நீ என்னை ஏன் என்று கேட்டால்
' நேரம் இல்லை ! ' என்பது தான் என் பதில் ;

ஆம், கண் இமைகள் சில சமயம்
இமைக்க மறக்கலாம், என் இதயமோ
உன்னை நினைக்க மறக்காது ;
என்றென்றும் உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதால் மற்றவை பற்றி
சிந்திக்க நேரம் தான் ஏது !!!

உன்னை நினைத்து கொண்டிருக்கையில்
மற்றவை எனக்கு எதற்கு ???