வியாழன், 30 அக்டோபர், 2008

மருந்து

என்ன தான் அடி ! காதல் ,
என்னைத் தருகிறேன் என்று
என்னைத் தொலைக்கிறேன் ;
தொலைப்பதை விரும்பி , அறிந்து,
தருவது போல் தொலைகிறேன் ;
இதுவும் சுகமே !
வயதை தொலைத்து அனுபவம் அடைகிறோம் ;
நானோ உன்னை அடைகிறேன் !
இது போதாத எனக்கு ,
போதும் என்ற மனமே
பொன் செய் மருந்தல்லவா !

திங்கள், 6 அக்டோபர், 2008

அகரம் ! .......

அதிசயங்களை அனுபவிக்கவில்லை ;

அதிசயங்கள் அதிசயிக்கவில்லை ;

அறிவதெதற்கு !

அதிசயங்களும் அதிசயக்கும் அதிசயம் ;

அட அருமை !

அவள் அருகினில் அமர்ந்திருப்பதாலே

அடியேன், அறிவேன் .......