செவ்வாய், 30 டிசம்பர், 2008

இயலாமல் போகுமா ?

ஏமாற்றம் ஏணிப்படிகளே !

எதிர்பார்ப்பு எதற்கு ? எதிர்த்து நிற்போம் ,

தோல்வியை தோற்கடிப்போம் ;

செல்லும் இடத்தைக் காட்டும்

மைல் கல்லே - வெற்றிகள் ;

வெற்றியை வென்றால் தான்

இலக்கை அடைய முடியும் !

நான் குழப்பவில்லை , புரியவில்லையா ?

தெரிந்துகொள் , வெற்றியின் களிப்பில்

கர்வம் கரைப் புரண்டு தலைக்கேறிவிடும்,

அதனை வென்றுவிட்டால் இலக்கினை

அடைவது இயலாமல் போகுமா ?

செவ்வாய், 9 டிசம்பர், 2008

ஏன் இல்லை மனமே ?

ஏழு கடல் தாண்டி இருக்கும்

மலைகள் தாண்டி , உழைக்க

நம்மை வருத்தி செல்கிறோம் ;

ஒற்றை தமிழ் சொல் கேட்டுவிட்டால்

அமிர்தத்தை வென்ற அமரர்கள் போல்

முகம் மலர்கிறோம் ! ஆனால்

கண் பார்வைக்கு எட்டியும் ,

நம் கை துடைக்கும் தொலைவில் இருந்தும்

அங்கே துடிக்கும் ஈழத்தமிழனுக்கு

கை கொடுக்க ஏன் இல்லை மனமே ?

திங்கள், 1 டிசம்பர், 2008

பாசம்

கடற்கரை மணலில்,

கையினை கெட்டியாக பிடிக்குமாறு,

சொன்ன பெற்றோரை பார்த்து

தனக்கு தானே சொல்லிக் கொண்டது ,

பிடித்துக் கொள்கிறேன்;

நான் தொலைந்து விடுவேன்,

என்பதற்கு இல்லை ;

இறுதிவரையில் உங்களுடன் வந்து

துணை நிற்பதற்கே !