வியாழன், 29 ஜனவரி, 2009

நான் அறியாப் பாதை !


எங்கே செல்கிறது இப்பாதை ?
நான் அறியாத பேதை ;

தேடிச் செல்வதிலே தனிச் சுவை ,
வெற்றிக்கு அழியா முயற்சியே தேவை !

அறிவுச் சுடர் தான் வழிகாட்டும் ஒளி,
அறிந்த பின் இடை வராது வேலி !

பாதையை மறைத்தது மூடு பனி ,
தேவைகேற்ப பாதை அமைப்பதே நம் பணி !

இத்தருணத்தின் தேவை தொலை நோக்கு பார்வை ,
வெற்றி பாதை ஆக்கிட சிந்திடுவோம் நம் வேர்வை !

(Photo courtesy: CK)




வெள்ளி, 16 ஜனவரி, 2009

உத்தமர் தினம் !

அனைத்திலும் அனைவரையும்

அரவணைக்க தினங்கள் பல !

நாம் சோற்றிலே கை வைக்க ,

சேற்றிலே கால் வைக்கும் உத்தமர்களை ,

உள்ளம் நெகிழ வைக்க அவசியம் இல்லை ;

கள்ளம் கபடம் அற்ற உள்ளம் அது !

பிரதிபலன் எதிர் நோக்காத நெஞ்சம் அது !

விளைச்சல் நிலத்தினை வியாபார நலனுக்கு ,

சூட்சமமாக சூழ்ந்து கொள்ளும் நிலைமையில் ,

தன் உயிராய் நேசம் கொண்டு ,

விளையும் பயிரினை முளையும் போதே ,

கண்டறிந்து வளர்த்து ,

நமக்கு அளித்த விவசாய விஞ்ஞானி !

உன்னை உலகறிய உயர்த்தினாலும் ,

உனது உள்ளம் சூது வாது தெரியாது!

புகழ்ந்து பாடத்தான் செய்கிறோம் ,

கர்வம் ஏறாத மகான் ஐயா நீ !

நாட்டின் கலாச்சாரம் உன் நடையிலே !

நாட்டின் வளர்ச்சி உன் வியர்வை துளியிலே !

உன்னை வாழ்த்தாத புலவர் இல்லை !

உன்னை சார்ந்து இராத தலைவன் இல்லை !

உத்தமரே ! உன்னை வாழ்த்தவில்லை ,

வணங்குகிறோம் உழவர் தினத்தில் !

திங்கள், 5 ஜனவரி, 2009

எனக்கானவள் !

நீ கருப்பா ? சிவப்பா ?
நீ குள்ளமோ ? உயரமோ ?
எதுவும் தெரியாது ;
நான் அறிந்தது
நீ எனக்கானவள் ;
உன்னை விட்டு தர தயார் ,
நான் உயிர் விட்ட பின் ;

நீ என் கை பிடித்து நடக்க
வாழ்க்கையில் கை பிடித்தாய் ;
நானோ ! நீ கை பிடித்துள்ள
நம்பிக்கையில் நடக்க உள்ளேன் ;
உறவுகள் பல விதம் ;
உறவு என்று வந்து உயிரில் கலந்து
என் உயிர் ஆக போகிறவள் நீ ;

நீ யாரென்று எனக்கு தெரியாது ;
என் உயிராக போகிறவள் நீ ,
என் கனவெல்லாம் நீயே !
உருவம் தெரியாது, பிறகு
கனவு எப்படி என்றால் ?
உருவம் இல்லை உணர்வு தான் ;

என்றும் எனக்கே என்றாக போகிறவள் ,
என்றாவது கிடைப்பாளா ? என்று ஏங்கவில்லை !
என்றானாலும் நீ எனக்கே என்ற
நினைவில் நனைகிறேன் !

என்னவளே ! நீ என்றும் எனக்கானவள் !

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு

புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது ;
குதூகலம் தொடர்ந்தன , உணர்ச்சிகள் உருவெடுத்தன ;
எதிர்ப்புகள் இல்லாத எதிர்பார்ப்பு வளர்ந்தது ;
இலக்குகள் இதமாக தெரிந்தன ;
முதல் நாள் முடிந்து, வருடம் தொடங்கியது ;
நாட்கள் நகர்ந்தது, மாதங்கள் மலர்ந்தது ;
முன்னேற்றங்கள் தள்ளாட்டங்கள் பகிர்ந்தன ;
பக்குவம் வளர்ந்தது , புத்தாண்டு தின
உறுதி மொழிகள் கனவுகள் ஆனது ;
இதோ டிசெம்பரும் வந்தது ,
இத்தனை நாட்கள் நிமிடமாக கடந்தது ;
இம்மாதம் நொடியென கடப்பதில் ஐயம்யேது !
ஆம் , அடுத்த வருடம் துவங்கும் நேரம் ,
உறுதி மொழிகளை உறுதியுடன் ஏற்க தயார் ,
புதிய எதிர்பார்ப்புடன் புதிய வருடம் ஏற்க தயார் ,
பகிர்ந்தது புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது !