திங்கள், 30 மார்ச், 2009

நாம் கடவுள் !!!

கடவுளே இல்லை ! என்று உரைக்க

நான் நாத்திகன் இல்லை ;

மூட நம்பிக்கைகளால் மூழ்கி

முடங்க நான் முட்டாள் இல்லை ;

கடவுள் என்பது நம்முள் உள்ள நம்பிக்கை;

அதனை நம்பிக்கையுடன் கண்டனர் சிலர்,

கண்களை மூடி மூட நம்பிக்கைகளால்

சிக்கினர் சிலர் ,

நம்பிக்கை தேவை இல்லை,

தன்னம்பிக்கை போதும் என்றனர் சிலர்;

நாத்திகனோ ! ஆத்திகனோ !

நம்மை வெல்ல கூடிய சக்தி இருப்பது உண்மை ;

நம் மனசாட்சியாக கூட இருக்கலாம்;

அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;

நம்பிக்கை ஓர் ஆயுதமே , ஆம்

நல்லவை புரியவும் தீயவை செய்யவும்

துணை நிற்பது நம்பிக்கை ,

அதனை பெற்றிருந்தால்

நாமும் கடவுளே !

செவ்வாய், 17 மார்ச், 2009

பெண்

பிறக்கும் போது அழுகும் குழந்தையினை

கண்டுவிட்டனர் மூடர்கள் ;

பெண் அழுவதற்கே பிறந்தவள் !

என்றனர் மடையர்கள் ;

உண்மையில் அவள் ஆளப் பிறந்தவள் !

பெண் சிசு பெறுவதை சாபம்

என்ற கிறுக்கனுக்கு தெரியாது, அது வரம் என்று ;

பெண் பொறுமை பெற்றவள் ,

அதனாலே பெருமை அவளுக்கு !

அதை மறப்பதால் சிறுமை சிலருக்கு !

வெள்ளி, 13 மார்ச், 2009

சென்னையில் ஓர் மழைக் காலம்

கேட்கும் போது வருவதில்லை ;

தேவைக்கேற்ப பெய்வதில்லை ;

உன்னை கண்டதும் பேராந்தம் ;

நீ வந்து அன்றாட வேலையில் மந்தம் ;

நீ அளவில் மீறி விட்டால் ,

சாலைகள் சாக்கடை ஆனது ;

ஊழியர்களின் சாலை பணி

மெத்தனமும் வெளி யானது ;

தேவை அற்றதும் மிதந்தது நீ தேங்கியதால் ;

விந்தை இல்லை ,

சென்னை யின் மழைக் காலத்தில் !

ஆம்! இதுவே மழையின் பிழைக் காலம் !

வியாழன், 12 மார்ச், 2009

கட்டளை

வர்ணங்கள் உனக்கா புதிது ? வண்ணத்துப்பூச்சியே !
மலரின் மீது அமர்ந்தாய்,
வெகு நேரம் இருந்துவிடாதே,
வலி எடுத்துவிட போகிறது மலருக்கு,
என்னவள் அழகுக்கு, அழகு சேர்க்க
மலரை பறிக்க சென்றேன்;
அதன் அழகில் லயித்தவன்,
அடிமை ஆனவன்,
அத்தோட்டத்தின் காவலன் ஆனேன் !
மகரந்த சேர்க்கைக்கு,
நீயும் ஒரு காரணகர்த்தா !
அதற்கே உனக்கு இச்சலுகை ;
அமர்ந்து கொள், ரசித்துக் கொள்,
அதன் அழகினை !
இது ஓர் ரசிகனின் அன்புக்கட்டளை !

புதன், 11 மார்ச், 2009

உறுப்புகளின் உறுத்தல்கள்

உன்னை தேடி அலைந்தது என் கண்கள் ;

நீ என்னை கண்டதும் ஓடி ஒளிய‌ துடித்தது

என் கால்கள் பயந்து அல்ல, மறைந்து ரசிக்க ;

உன் பெயரையே உச்சரித்தது என் உதடுகள் ,

உன்னிடம் காதலை சொல்லாமல் ;

இசைக்கே இசைந்திடாத என் செவிகள் ,

உன் உதடுகளில்,

ஏதேனும் சத்தம் வெளிப்ப‌டாதா என்று ஏங்கியது ;

உன் பாதங்கள் நடந்தே நோகும் என்று ,

உன் பாதங்களை தாங்க துடிக்கிறது என் கைகள் ;

என் காலம் முழுவதும், உன்னுடன்

நடப்பதையே எண்ணுகிறது என் பாதங்கள்;

என் இதயமோ இவ்வனைதுக்கும் மேல்,

ஆம், உன்னை தவிர வேறெதையும்

ஏற்காமல் வெற்றிடம் ஆனது ;

உறுப்புகள் இப்படி உறுத்திக் கொண்டிருக்க,

இவை எதையும் சிந்திக்காமல், உன்னையே

எண்ணி செய‌லிழ‌ந்து கிடக்கிறது என் மூளை ;