கடவுளே இல்லை ! என்று உரைக்க
நான் நாத்திகன் இல்லை ;
மூட நம்பிக்கைகளால் மூழ்கி
முடங்க நான் முட்டாள் இல்லை ;
கடவுள் என்பது நம்முள் உள்ள நம்பிக்கை;
அதனை நம்பிக்கையுடன் கண்டனர் சிலர்,
கண்களை மூடி மூட நம்பிக்கைகளால்
சிக்கினர் சிலர் ,
நம்பிக்கை தேவை இல்லை,
தன்னம்பிக்கை போதும் என்றனர் சிலர்;
நாத்திகனோ ! ஆத்திகனோ !
நம்மை வெல்ல கூடிய சக்தி இருப்பது உண்மை ;
நம் மனசாட்சியாக கூட இருக்கலாம்;
அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;
நம்பிக்கை ஓர் ஆயுதமே , ஆம்
நல்லவை புரியவும் தீயவை செய்யவும்
துணை நிற்பது நம்பிக்கை ,
அதனை பெற்றிருந்தால்
நாமும் கடவுளே !