செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

வாழ்க்கையே கொண்டாட்டம்

எனக்கே என்னை பிடிக்கவில்லை;

உனக்கு என்னை பிடிக்கும் வரை !

வாழ்வில் என்ன செய்வது என்றிருந்தேன் ,

உன்னை காதலிக்க வைத்தாய் !



வாழ்வில் அழகை ஆராதிக்க ஆராய்ந்திருந்தேன் ;

பல்கலைக் கழகமாய் என்னை வந்தடைந்தாய் !

இனி ஆராய்ச்சி தான் எதற்கு ?

உன்னை ப‌டிப்ப‌தெத‌ற்கு பார்த்தே

தெரிந்து கொள்கிறேன் !



நான் கண்ட ஒரே பெண் நீ தான் !

என்று பொய் உரைக்க போவதில்லை ;

நானும் பலரை கண்டதுண்டு

காதலித்ததும் காதலிப்பதும் உன்னை மட்டுமே !



கொண்ட காதலினை நிரூபிப்பது கடினமே !

நான் செய்வேன் , என் வாழ்நாளினை

உன்னுடன் வாழ்ந்து கொண்டாடி !



ஆம் ! நீ என்னுடன் இருக்கையில்

அனுதினமும் கொண்டாட்டமே !!!



என் வாழ்க்கையே கொண்டாட்டம்,

கொண்டாடுகிறேன் !!!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஏக்கம் !!!

என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைந்தேன் !
உன்னை சந்தித்தபின்
சிந்திக்க ஏதடி நேரம் ?
உன் நினைவுகள் புதைந்ததனால்
சிதைந்தது என் மூளை !

இன்றும் ,
என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைகிறேன் !
ஆம்! உன்னை சந்திக்கும் நேரம்
மறுபடியும் வராதா ?
என்று ஏங்கியே !

புதன், 5 ஆகஸ்ட், 2009

களவாடிய பொழுதுகள் !!!

சில சில்லறைகள் களவாடிய போது
பதறியது நெஞ்சம்,
சுற்றியுள்ள உலகத்தை நினைத்தே !
உன்னை களவாடி
என்னுள் வைத்த பின்
பதற்றம் ஏதடி ?
என் உலகம் நீயான பின் !!!