வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஏமாற்றிவிட்டேன் - நானில்லை

என்னை கரு கொண்டவள் கருவிலே
கரைத்திருந்தாலும் வலியினை அறிய
வாய்ப்பில்லை - அறியவா போகிறேன் !

காகிதத்தில் காதலைக் காண்பித்தேன் ;
காற்றிலே விட்டு கருக்கி விட்டாய், என் இதயத்தினை !

உயிர் துறக்க துணிந்திருப்பேன்,
வீரனல்லவா மனதினை மாற்றிவிட்டேன் ;

என்றாவது பருவமழை பொய்த்தால் ,
விவசாயி வியாபாரியில்லை - விளைச்சல் இல்லாததால் ,
வீணாகமாட்டான் நம்பிக்கை இருப்பதால் ;
நானும் தான் - நட்பு இருப்பதால் ;
பெற்றோரே என்னுயிர் தோழர்கள் ;

பெண்ணே !
காதலியாகத்தான் கொடுத்து வைக்கவில்லை ,
நட்புடனாவது பழகு ;
ஒரு நாளாவது உன்னை நினைக்க வைப்பேன் ,
என்னவென்றா ?
' ஏமாந்து விட்டாயடி ' என்று !!!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நம்பிக்கையின் சுகம் !

காத‌லில் காத்திருப்ப‌தே சுக‌ம் ;என்ற‌

க‌ருத்தினைக் க‌ருவித்திருந்தேன் என்னுள்!

காத‌லில் காத்திருக்க‌லாம் ;

நானோ காத‌லிக்க‌க் காத்துக்கொண்டிருக்கிறேன்;

என் காத‌லை,நீ நிராக‌ரித்துவிட்டால்

சாக‌ மாட்டேன் ,ஆனால் வாழ்வ‌தெப்ப‌டி ;

நீ என்னைக் காத‌லிப்பாய் என்ற‌

ந‌ம்பிக்கையிலே வாழ்ந்து விடுவேன்,

இதுவும் சுக‌ம் தான் ;

புன்னகை பூவே !

இதயங்கள் இடமாறினாலும்

வெற்றிடம் ஆவதில்லை , ஊடல்கள்

இருப்பினும் உரிமை உடையாது ,

வார்த்தைகள் வ‌ராவிடினும் உத‌டுக‌ளில்

பூக்கும் புன்ன‌கை இருக்கும்,

காத‌ல் இருப்ப‌தால் !

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

விழுதுகள்

விழுந்தும் போற்றப்படுகிறாய்!

விழுதே !

உன்னை பற்றி விவாதம் ஏன் ?

குடும்பச் சூத்திரம் சூளுரைத்த

சூத்திரதாரி நீ !

பாரத்தினை வெறுப்பில்லாமல்

பொறுப்புடன் பெற்றோரிடமிருந்து

பெற்றுக்கொள்ளும் பக்குவத்தினை

பிள்ளைகளுக்கு கற்றுவித்தாய் !

நன்றி சொல்லத்தான் வார்த்தை ஏது !

விழுவதும் எழுவதற்கே,

என காட்டிய எடுத்துக்காட்டு !

வாழ்வினில் விழும் முதல் அடி ,

வெற்றியின் உந்துதல் படியே !

என்றுரைத்து, வாழ்க்கைச் சிற்பத்தை

சீர்ரமைத்துடும் உழி நீயே !

உன்னை பற்றி கூற நினைத்தேன் ,

பாராட்ட முற்பட்டேன் ,

இறுதியில் நன்றி தெரிவிக்கும்

வரிகள் குவிந்தன ;

தோழமை இலக்கணம் தந்த சிற்பியே !

வள்ளுவன் கூறிய கூற்றினை ஏற்று ,

நண்பனின் இடுக்கண் கலைந்திடும்

கடமையினை கற்பித்த ஆசானே !

ஆம் ! விழுதாய் இருக்கும் நீ ,

வேறு வழுவினை இழந்ததும் ,

வேறாய் உருவினை மாற்றி ,

வாழ்ந்து கொண்டிருக்கும் வேதம் நீ !

கற்கிறேன் நாளும் உன்னிலிருந்து

நன்றி தெரிவிக்க போவதில்லை கடமைபட்டுள்ளேன் ....