செவ்வாய், 16 மார்ச், 2010

உனக்காக பிறந்தவன் !

காதல் என்பது உணர்வாயினும்
என் உயிரில் கலந்தாய் ;

கலந்தது என் உயிர் என்றாலும்
என் நினைவில் நிறைந்தாய் ;

நினைவில் நிறைந்திருப்பினும்
என் கண்கள் உனையே தேடின;

கண்கள் உன்னை தேடுகையில்
என் உதடுகள் உன் பெயரையே உச்சரித்தன ;

உதடுகள் பெயரை உச்சரிக்கையில்
என் கைகள் இதனை சிதறின நீ படிப்பாய் என ;

நீ இதனை படிக்கையில்
என்னை அறிந்திருப்பாய் ;

அறிந்ததும் உணர்ந்திருப்பாய்
உனக்காக பிறந்தவன் என்று !

சனி, 6 மார்ச், 2010

ரசிகன் ஆனேன் !

வழி மீது விழி வைத்தேன் ,
அவள் வருகைக்கு !
என் விழி எங்கும் அவள் பிம்பம் ;

சற்றே கவனித்தேன் ,
அவள் பாதம் படவே வழியும்
எங்கும் ஏங்கி இருந்தது !

வியந்தேன், மகிழ்ந்தேன் !

அவள் வருகைக்கு காத்திருந்த
நிமிடமும் யுகமானது ஆயினும்
அந்த யுகம் முழுவதும்
அவளை நினைத்து கொண்டிருப்பதால்
அதையும் ரசித்தேன் !

ரசிகன் ஆனேன் !