வெள்ளி, 25 ஜூன், 2010

வல்லவன்

உம்மை யாம் பார்த்ததும் இல்லை,
உன்னுடன் பேசியதும் இல்லை ,
நீ பேச நான் கேட்டதும் இல்லை ;

என்னை உன் சிந்தனை கவர்ந்தது ,
உன் எழுத்துக்கள் வீழ்த்தியது ,

இன்று புலவன் என்பவரின்,
ஐயம் தீர்த்த ஐயன் நீ ;

எம் தாய் மொழி இன்று செம்மொழி
அதனை நன் மொழியாக்கியவன் நீ ;

நீ சொல்லிடாத தலைப்புக்கள் இல்லை ,
அதை புகழ்ந்திடாத நாவும் இல்லை ,
அதனை எதிர்திடும் சமயம் உண்டோ !

உன் எழுத்தின் சுவை அறிய ,
தமிழை அறிந்தனர் அறிஞர் பலர் ,
தமிழின் வலிமை ஏற்றிய வல்லவன் நீ,
உன்னை வள்ளுவன் என்பவன் நான் ;

நான் தமிழன் என்ற கர்வத்தை விட ,
நீவீர் தமிழன் என்பதில் பெருமை
கொள்ளும் சாமான்யன் ;

உன்னை பெருமைபடுத்த
நான் கூறும் வார்த்தை
உன் புகழின் முன் சிறுமையே !

இது உமக்கு என் சமர்ப்பணம் ,
என்றும் தமிழில் உண்டு
உனக்கு ஓர் சிம்மாசனம் !

செவ்வாய், 1 ஜூன், 2010

அரசியல் , அரசியலா

அரசியல் ,
அரிசியிலும் வந்தாச்சு ,
குழைத்திடும் குரனையாய் ;
படிப்பிலும் புகுந்தாச்சு ,
கொட்டிடும் தேளாய் ;
மக்களும் ஏமாந்தாச்சு,
தேர்தல் எனும் பெயரால் ;
கட்சியும் மாறியாச்சு ,
காட்சியில் மாற்றம் இல்லை ;
சொற்கள் பல கேட்டாச்சு ,
பொருள் ஏதும் விளங்க வில்லை ;


அரசியல் ,
அரசால் இயலும் ;
என்ற நம்பிக்கை ,
அரசியலா? ,
அரசால் இயலுமா ?
என்று சிதைந்தாச்சு ;


அரசியலா ,
பலரும் இதை பேசியாச்சு ,
எங்கும் இல்லை முன்னேற்றம் ;
ரொம்பவும் ஏங்கியாச்சு ,
எங்காவது எதிலாவது
வருமா முன்னேற்றம் !