வியாழன், 28 ஜனவரி, 2010

கற்போம் !!!

சரித்திரம் படிக்க கற்றோம்,
அதனை படைக்க கற்போம்;

இயற்கையை ரசிக்க கற்றோம்,
அதனை பாதுகாக்க கற்போம்;

வாழ்க்கையை வாழ கற்றோம்,
அதனை வெல்ல கற்போம்;

எதிரியை மன்னிக்க கற்றோம்,
துரோகியை மறக்க கற்போம்;

காதலியை நேசிக்க கற்றோம்,
காதலை சுவாசிக்க கற்போம்;

கற்றதோ கடுகளவு , கற்க வேண்டியவை
கடலளவு ஆயினும் கற்போம் !!!

திங்கள், 25 ஜனவரி, 2010

பயணங்கள் முடிவதில்லை !!1

இரயில் சிநேகிதமும்
ஓர் மலரன்றோ !
ஏனெனில் அவை வெகு காலம்
இருப்பதில்லையே !

மலர்களிலே குறிஞ்சி மலரும்
இருப்பது போல் ,
இரயில் சிநேகிததில்
குறிஞ்சி மலரும் பூப்பதுண்டு !
அம்மலருக்கும் விட்டில் பூச்சியின்
வாழ்வே தான் !

என்றேனும் நட்பு எனும் பூ
மலர்ந்து விட்டால் என்றென்றும்
அந்த பயணங்கள் முடிவதில்லை !!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஒற்றை வார்த்தை !!!

உயிரே !
ஒற்றை வார்த்தை
கவிதையானது
உந்தன் பெயர் எனக்கு !

அன்பே !
என்னை முற்றிலும்
ஆக்கிரமித்த ஒற்றை
உயிர் நீயடி !

சகியே !
உலகினில் காதலை சொல்ல
வார்த்தைகள் பல தேவைப்படுகையில்
"காதலிக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை
போதுமடி எனக்கு !

ஆம் ,
நான் காதலிக்கிறேன்
என்ற போது,
உன்னை தவிர வேறு
யாராக தான் இருக்க முடியும் !

ஒற்றை வார்த்தையில்
என் ஒற்றை வாழ்க்கையை
சொல்லிவிடுகிறேன் "நீ" என்று !