ஞாயிறு, 18 ஜூலை, 2010

தனிமை!

என்னை சுற்றி இருந்த
வெறுமை தான் தனிமையோ !
என்னை எனக்கு அறிய
வைத்த நிலைமை இனிமையே !

நினைத்ததை செய்தவனை
செய்வதை நினைக்க வைத்த அருமை !
எதையும் செய்யும் சுதந்திரம் ஆனால்
அதன் வெறுமை தருத்திரம் கொடுமை !

தனிமை வாழ்வினில் வரலாம்
ஒரு வேளையினில்- இடைவேளையிலே !!!

வியாழன், 15 ஜூலை, 2010

கொண்டாடுவோம் குதூகலிப்போம் !

யாதும் ஊரே யாவரும் கேளிர் ,

சொன்னது யாரு அதை புரிவது யாரு

நாம் மட்டும் அதை அறிந்தோமா

இல்லை புரிந்தோமா ?

ஆனால் வாழ்தோம்

கேளிக்கையுடன் கேளிராய் ,

சண்டை போட்டு சகோதரனாய்

சச்சரவுகள் இருந்தும்

நாம் மாமன் மச்சான்கள் !


கல்லூரி சாலையில் நாம்

கால் பதித்து,

எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்

எட்டு திக்கும் அதன் நினைவுகள்

மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;


நினைவுகள் நினைப்பதற்கே ,

சுகமான கல்லூரி நினைவுகளை

இந்நாளில் எந்நாளும் நினைத்து

கொண்டாடுவோம் குதூகலிப்போம்!

(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )