திங்கள், 27 செப்டம்பர், 2010

நிலவை பிடித்தேன் !!!

பயமறியா வயதினில்,
நிலவே உன்னை பின்தொடர்ந்து
எந்தன் வீட்டினில் சேர்த்து அனைப்பேன் ; ஆனால்
ஆதங்கப்பட்ட ஆதவன் உதித்து
உன்னை பறித்து கொள்வான் ;
சற்று வருந்துவேன் மீண்டும்
மாலை வரும் வரையினில் ;
இனி வருந்தப் போவதில்லை ,
நிலவு எனை பிரியப் போவதில்லை ;
மனையாளாய் எந்தன் மனை ஆள்கிறாள் !!!

புதன், 22 செப்டம்பர், 2010

அளவுகோல்

அளவுக்கு மிஞ்சிவிடில்

அமிர்தமும் நஞ்சாகுமே !

உந்தன் மீது நான் வைத்த

அளவினை கடந்த அன்பு

என்னுள் நான் என்ற

அகந்தையினை நசுக்கி விட்டது !

நான் வைத்த அன்பு

உந்தன் மேல் என்பதால்

அளவுகோலும் அளப்பதை மறந்தது !

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மழையோடு ஓர் பொழுது !

என் வாழ்வினில் பல பொழுதுகள் ,
என்னவளுடன் எண்ணற்ற பொழுதுகள் ,
உன்னுடன் இந்த பொழுது !


அவளிடமும் சொன்னதில்லை
நீ தான் என் முதல் காதலி என்று,
கோவித்துக் கொள்வாள் கள்ளி ;


உங்கள் இருவருடனும் ஒரே சமயத்தினில்
காதல் செய்திட எண்ணிய ஆசை தீர்ந்தன ,
இந்த பொழுதினில் ;


உன் முதல் துளி
என்னை தழுவியதும் - மெய்சிலிர்த்தேன் ;
நானும் உன் பின்
வந்துவிடுவேனோ என்ற அச்சத்தினால்
அவளை மறந்து என் கை பிணைத்தாள்,
பிறகென்ன நானும் எனை மறந்தேன் ;

நீ என் மேனி தழுவ ,
அவள் அன்பு என் உள்ளம் தழுவ ,
விலை மதிப்பில்லா பொழுதின் சொந்தக்காரன் ,
கர்வத்தில் கர்ஜித்து ,
வினாடியும் வீணடிக்க விருப்பமில்லை ,


ஓர் குடையினில் கீழ் நடந்திருந்தால்
கவனம் சிதறி இருக்கும் , மழை துளி
அவள் மேல் படாமல் தடுப்பதில் ;


நான் ரசித்தவள் எனை அணைக்க ,
நான் நேசித்தவள் என் கை பிணைக்க ,
எங்கள் பாதங்கள் நடை பயின்றன !


இதே நொடி என்றாவது கிடைக்கலாம் ,
கிடைத்த இந்த நொடி எனக்கான பரிசு ,
பொக்கிஷம் என்று உயர்த்தி இருப்பேன் - ஆனால்
அது வாழ்வில் ஒரு முறை கிடைப்பது !


பல பொழுதுகளை ஏங்கும் நெஞ்சத்துடன்
விடை கொடுக்கிறேன்
நீ மீண்டும் வருவாய் என !