செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசையே அலை போலே!!!

கரை தேடி வருகிறாய்
கரை தொட்ட  பின்
நுரையாகி போகிறாய்
நீயும் என் தோழனே!

அடைந்துவிட்டோம் என்றாசை,
அடைந்ததும் நிராசையானது;

அறிந்தது கல்லளவு,
அறியாதது உலகளவு,
என்றதை உணர்ந்ததும்;
ஆசையே அலை போலே!!!

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

வினா ஓர் க‌னா....!!!

சில‌ வினா விடையாக‌லாம் ;
சில‌ வினா ஆச்ச‌ரிய‌ம் ஆக‌லாம் !
சில‌ வினா வின‌வாம‌ல் போக‌லாம் ;
சில‌ வினா விட‌ முடியாம‌ல் போக‌லாம் !!
சில‌ வினா என்றும் ஓர் க‌னா....!!!

செவ்வாய், 29 நவம்பர், 2011

அலைக‌ளின் அறித‌ல் !!!

போகிற‌ போக்கில்..
உன் பெய‌ரை க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில்
எழுதினேன்!
அலைக‌ளும் அறிந்துள்ளது
நீ என‌க்கான‌வ‌ள் என்று ;
உன் பெய‌ரால் பெருமை ப‌ட்ட‌
ம‌ண‌லை என்னிட‌ம் வ‌ந்து சேர்க்கிற‌து!!

சனி, 12 நவம்பர், 2011

என்னில் நீ !!!

நான் சொல்கையில் உண‌ர்வு,
நீ சொல்கையில் நிறைவு !
என்னில் நான் த‌னிமை,
என்னில் நீ அருமை !!
உன் ம‌னதை உண‌ர்வேன் ,
உன் சொல்லால் ம‌கிழ்வேன் !
உன‌க்காக‌ எதையும் துற‌ப்பேன்,
என்றும் உனை ம‌ற‌வேன் !!!

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உண்மை !!!

என்ன‌ தான் வாழ்க்கை
என்று இருந்த‌ போது இருந்த‌து ஆன‌ந்த‌ம்.....

இது தான் வாழ்க்கை
என்று‌ உண‌ர்ந்த‌ போது இருந்த‌து ம‌கிழ்ச்சி...

இது தானா வாழ்க்கை
என்று அறிந்த‌ போது இருந்த‌து ச‌லிப்பு....

என்ன‌ டா வாழ்க்கை
என்றான‌ போது தேவை இருந்த‌து நிம்ம‌தி......

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

அழகி !!!

உலகின் அழகியாகதிறமைகள்,
சோதனைகளும் தேவை ;
எந்தன் அழகியாக
திறமைகள் எதற்கு?
சோதனைகள் தான் எதற்கு?
எந்தன் அழகியாக
நீயாகட்டும் இருக்கவேண்டும்!

புதன், 14 செப்டம்பர், 2011

நேற்று இன்று நாளை !!!

நாளை துலைந்த‌து என்று
ப‌த‌றும் மானிடா,
அதை துலைத்த‌து நீ தானே
இன்றைய‌ ச‌முதாய‌த்தில்
நேற்றைய‌ பார‌ம்ப‌ரிய‌த்தை!!!

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக்க‌ள்....

அகிம்சையின் ப‌ல‌த்தை பார்த்த‌தில்லை,
அத‌ன் ப‌ல‌னால் ப‌ய‌ன‌டைந்தோம் ;
ஆண்டுக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்த‌ன‌,
உல‌கம் தூங்கும் போது
நாம் சுத‌ந்திர‌ம் அடைந்தோம் என்ற‌ன‌ர்,
அத‌ன் க‌லைப்பில் ம‌க்க‌ள் தூங்கும் போது
அர‌சிய‌ல் குள்ள‌ ந‌ரிக‌ள் விழித்த‌ன‌ர்
ம‌க்க‌ளை ம‌ந்த‌மாக்கி
அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ராக‌ நினைக்கின்ற‌ன‌ர்,
விட‌வேண்டாம் ந‌ம் விடுத‌லையை,
சுதாரித்து கொள்வோம் சுத‌ந்திர‌ம் சூரையாகும் முன்,
இச்சுத‌ந்திர‌ தின‌த்தில் சூளுரைப்போம்,

சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக்க‌ள்....

சனி, 6 ஆகஸ்ட், 2011

"ந‌ண்பேன்டா"!!!

ம‌ந்தையில் சென்றாலும்
விந்தை நிக‌ழ்திடுவோம் !
சிந்தையினில் ஒற்றுமை...
ஒற்றை வார்த்தையினில்
எங்க‌ள் வாழ்க்கை "ந‌ண்பேன்டா"!!!

ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்..

புதன், 27 ஜூலை, 2011

வாகை சூடவா!!!

கண்ணில் கண்ட பாதைகள் மெய்யானதா?
கால்கள் சென்று தோற்றதால் பொய்யானதா?

கண்ணில் கண்டிடும் எழுத்துக்கள் மெய்யானதா?
செவியினில் கேட்டிடும் மெய்யின்மையால் பொய்யானதா?

கண்ட பாதையும் எழுத்துக்களும் மெய்யானதே,
வென்றிடாத பாதையில் சென்ற கால்கள் பொய்யா?
மெய்யான வார்த்தைகள் கேட்டிறாத செவிகள் பொய்யா?

சோதனைகள் அனைத்தும் சாதனைகள் ஆகிவிட்டால்
சாதனைகள் அனைத்தும் சாதாரணமே,
சரித்திரத்தில் சாதனைகள் மட்டுமே இருந்துவிடில்,
சரித்திரம் வெறும் உயிரில்லா ச‌ரீர‌ம் போலே,
பயன் ஏதுமில்லை !!!

வெற்றி என்பது மையம்
என மையம் கொள்ளாமல்,
மைற்க‌ல்லாய் கடந்து வந்து
வாகை சூடவா!!!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இய‌லாமையின் இய‌லாமை

ச‌ரித்திர‌ங்க‌ள் சாஸ்த்திர‌ங்க‌ள் ஆகையில்,
த‌ன்ன‌ம்பிக்கை த‌ட‌ம் போட்டிட‌,
ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்பிக்கை ஊட்ட‌,
சான்றோர்க‌ள் சான்றித‌ழ் த‌ந்திட‌,
க‌ட‌மைக‌ள் க‌ண்ணிய‌த்துட‌ன் ந‌ட‌க்கையில்
இய‌லாமையால் எதுவும் இய‌லாது...

திங்கள், 18 ஜூலை, 2011

துலைத்தேன் !!!

ம‌திப்பிட்ட‌ பொருளினை அடைய‌

வாழ்வினை துலைத்தேன் உழைத்தேன்,

ம‌திப்பில்லா உந்த‌ன் புன்ன‌கையினை அடைய‌

என்னை துலைத்தேன் சிலிர்த்தேன் !

புதன், 22 ஜூன், 2011

ப‌ய‌ம‌றியான்!!!

க‌ண்க‌ள் தேடும் தூர‌த்தில் இருந்தாய்
உனை க‌ண்டு ல‌யித்த‌ன‌;
கை தொடும் தூர‌த்தில் இருக்கிறாய்
உனை க‌ண்டு ப‌ய‌ந்த‌ன‌;
நானோ இத‌னை ப‌ய‌ம் என்று அறியாத‌வ‌னாய் !!!

ஞாயிறு, 19 ஜூன், 2011

முத‌ல் முறை !!!

முத‌ல் முறை,

பிரிய‌ நினைத்தேன்,
எந்த‌ன் இமைக‌ள் உன்னை க‌ண் கொள்ள‌...

க‌ள‌வாட‌ துடித்தேன்,
உன்னை என‌க்கு...

வீழ்ந்திட‌ யாசித்தேன்,
உன்னுட‌ன் வாழ்ந்திட‌...

வாழ்ந்திட‌ நேசித்தேன்,
உன்னுட‌ன் எந்தன் வாழ்வினை...

யாசித்து நின்றேன்,
உந்த‌ன் கைக‌ள் ப‌ற்றிட‌...

நீயே என்ன‌வ‌ள் என்றுண‌ர்தேன்
உன்னை பார்த்த‌தும்...

த‌லைகுனிய‌ போனேன்
வேறு பெண்ணை பார்த்த‌தும்...

அனைத்தும் முத‌ல் முறை...
உன்னை முத‌ல் முறை பார்த்த‌தும்....

செவ்வாய், 31 மே, 2011

ஊடல் !!!

ந‌ட்பினில் பிரிந்தோம் சேர்ந்தோம் சிரித்தோம்!
'உற‌வினில் பிரிந்தோம் ச‌ந்திப்போம் சிந்திப்போம் !!
ந‌ட்பினில் ஊட‌ல் த‌ண்ணீரில் க‌ல‌ந்திடும் உப்பாகும் ,
உற‌வினில் ஊட‌ல் உப்புத் த‌ண்ணீரை
சுவைப்ப‌து போல் க‌ச‌ந்து விடும் !

வெள்ளி, 20 மே, 2011

என்ன‌ வாழ்க்கை டா இது!!! - 2

க‌னா காணும் கால‌ங்க‌ள்
க‌ணிணி கால‌ம் ஆன‌து;
க‌னிக‌ள் விளைந்திடும்
நில‌மோ கால‌மான‌து;

உற‌வுக‌ள் உலோக‌மாய் உருபெற்ற‌து,
பொன்னும் பொருளும் ம‌திப்பெற்ற‌து
ம‌னித‌ர்க‌ள் ம‌திப்ப‌ற்ற‌ ம‌ர‌மாயீன‌ர்;

இணைய‌த்தின் இம்சைக‌ள்
இம‌ய‌ம் தொட்ட‌து;
மென்பொருளை க‌ற்ற‌ன‌ர்,
ம‌னித‌ நேய‌த்தை ம‌ற‌ந்த‌ன‌ர்;

வாழ்க்கையை வாழ்வோம் என்று
வாலிப‌ம் வ‌ற‌ண்டோடுது,
வாழ்ந்திடுவோம் வாழ்வினை
வென்றிடுவோம்!!!

என்ன‌ வாழ்க்கை டா இது!!!

வியாழன், 12 மே, 2011

என்ன வாழ்க்க டா இது !!!

கடந்த கனமான காலம் ,
சிந்தித்திட சிறுதளவும் சிந்தனை இல்லை,
துளி கண்ணீர் சிந்தவும் திடம் இல்லை;
பிடித்தவரை பார்த்திட இடம் உண்டு ,
பார்த்தவரை பிடித்திட வழி உண்டு ,
பிடித்ததை சொல்லிட இடம் உண்டா ?
உன் நெஞ்சினில் நடப்பதை ஏற்றிட வலு உண்டா ?
சந்தித்து பேசிட சகாக்கள் ஆயிரம் ,
சட்டையில் சில்லறை சிரமம் ,

கடக்கும் கனா காலம்
சிந்திக்குறோம் சில்லறைகளுக்கு மட்டும் ,
சட்டையில் சில்லறைகள் உண்டு ,
சந்தித்து சிறகடிக்க சகாக்கள் ஒவ்வொரு திக்கிலும் ,
பிடித்ததை சொல்லிட திடமும்
இடமும் உண்டு , நேரம் இங்கேது நமக்கு !
என்ன வாழ்க்க டா இது !!!

புதன், 13 ஏப்ரல், 2011

வாக்க‌ளிப்போம் !!!


அவ‌ நிலையா ? அவ‌ச‌ர‌ நிலையா ?
த‌மிழ் நாட்டின் த‌லைவிதியா?
த‌மிழ‌னின் த‌லையெழுத்தா?

ஈழ‌னை ஈச‌னின் கொடுத்தோம் !
நாட்டினை குள்ள‌ நரிக‌ளிட‌ம் கொடுத்தோம் !!
அர‌சிய‌ல் ஆழ்க‌ட‌லை
ச‌த்திய‌ம் செய்து சாக்க‌டை ஆக்கின‌ர் !!!

வார‌த்தில் அனைத்து தின‌த்திலும்
க‌ருப்பு நாள் அனுச‌ரிக்கிறோம்,
வ‌ருட‌த்தில் அத்துனை நாட்க‌ளும்
ஆகாம‌ல் பார்த்துக் கொள்வோம்,

வாக்க‌ளிப்போம் !!!

வியாழன், 31 மார்ச், 2011

ஆயுத‌ம் !!!

ஆய‌த்த‌மான‌வ‌னை ஆயுத‌மாக்கும்,
ஆத்திர‌கார‌னை ஆட்கொள்ளும்,
ஆத‌ர‌வ‌ற்ற‌வ‌னுக்கு ஆத‌ர‌வாகும்,

அஹிம்சை ஹிம்சையாகும் போது
அமைதி காக்க‌வும்,
ச‌ட்ட‌ம் சாக‌டிக்க‌ப்டும் போது
ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌வும்,

ஆய‌த்தமாகும் ஆயுத‌ம் !!!

செவ்வாய், 8 மார்ச், 2011

உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

என்னை,
ஆக்கி வைத்து, ஆள‌ வைத்து
ஆட் கொண்டிருக்கும், கொள்ள‌ போகும்
ஆர‌ம்ப‌த்தின் ஆணிவேரே,
ம‌கிமையே ம‌க‌ளிரே...
உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

திங்கள், 7 மார்ச், 2011

ஆசை !!!

த‌வ‌றை,
ம‌ற‌ப்ப‌தில் ம‌ழலையாய்;
ம‌ன்னிப்ப‌தில் பெரிய‌வ‌னாய்;
உண‌ர்வ‌தில் அறிஞ‌னாய்;
அத‌னை செய்கையில், நான் நானாய்
இருந்திட‌ ஆசை !

வெள்ளி, 4 மார்ச், 2011

இனிமை

நாவினில் உச்ச‌ரித்த‌வையெல்லாம்
மொழி என்பது ம‌ட‌மை;
நாவினை உச்ச‌ரிக்க‌ வைப்ப‌வையே
தாய் மொழியின் ம‌கிமை;
எங்க‌ள் செம்மொழியின் இனிமை !!!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உணர்வு

தொடுவ‌தால் உண‌ர்கிறோம்
நாமும் ம‌னித‌ர் என்ற‌ உண‌ர்வினை,
நீ தொட்ட‌தும் சிலையானேன்
உன்னை ம‌ட்டும் ர‌சிக்கும் உண‌ர்வினால் !!!

புதன், 9 பிப்ரவரி, 2011

நொடி

என்னை நான் ம‌ற‌க்க‌
உன்னை பார்த்த‌ ஒரு நொடி போதும் !!
அத‌ன்பின்
உன்னை நான் ம‌ற‌க்க‌
இந்த‌ வாழ்வினில் ஒரு நொடியும் இல்லை !!!

வியாழன், 27 ஜனவரி, 2011

குடிய‌ர‌சு தின‌ வாழ்த்துக்க‌ள் !!!

வெங்காய‌த்தின் விலை
வெறி கொண்டு ஏறி இருக்க‌,
எரிபொருளின் விலை
வ‌யிற்றெச்சிலை கூட்ட‌;

மாநில‌ங்க‌ளின் எண்ணிக்கை
ம‌க்க‌ள் தொகைய‌ள‌வுக்கு பெருக்கிட‌
கொதித்திடும் கொள்கைவாதிக‌ளால்,

குடிய‌மைக்க‌ க‌ஷ்டப்ப‌டும் குடிய‌ர‌சாய்
ஆள‌ப்ப‌டும் அன்னை பூமி !

குடிம‌க‌னாய் குடிய‌ர‌சு தின‌ வாழ்த்துக்க‌ள் !!!