வியாழன், 17 டிசம்பர், 2015

அனுபவம் !

சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!


வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!

வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!

நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!

நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!

திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!

என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!