செவ்வாய், 9 ஜூன், 2009
பிரியா விடை !!!
பறந்து சென்றாயா ?
இல்லை சிகரம் தொட தானே !
உன்னை பிரியும் போது
பெரிதாய் தெரிந்த உலகம் ...
உன்னை காண
எண்ணும் போது கடுகானதே...
வியாழன், 7 ஆகஸ்ட், 2008
உன்னையே மறந்தேன் !
காதலிக்கும் போது என்னை மறந்தவன் ,
கவிதையாய் கிறுக்கும் போது உன்னை மறந்தேன் ;
பதறாதே ! நான் கிறுக்குவது தோழியைப் பற்றியது ;
காதலிப்பவள் தோழியைவிட சிறியவளா ?
என வினவலாம் ;
நீ தோழியாய் தோள் கொடுத்ததை விட
காதலியாய் என் காதினைப் பிடித்து சினுங்கியதே
நினைவிற்கு வருகிறது நான் என்ன செய்வேன் !
காதலை சொல்லும் முன் உன் தோழியுடன்
பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;
உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன்
பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் ;
நட்பு தான்
காதலில் உன் உயிரை பறிகொடுப்பாய்
நட்பில் அதனை விட்டுக் கொடுக்க முடியும் ;
காதலில் கனவையும் வீணடிப்பாய்
நட்பில் சாகும் வரை சலிக்கமட்டாய் - வாழ்வதற்கு ;
அடுத்தவன் காலில் விழும் தருணத்தைத்
தாங்கிப் பிடிக்கும் நட்பு - ஆனால்
மானங் கெட வைத்து விடும் காமங் கொண்ட காதல் ;
காலத்தின் காலினை வாரிவிட்டு காலனைக்
கதவின் முன் நிறுத்தும் காதலைக் காதலும் கேட்காதே ;
நலம் கொழிக்கும் நடப்பினை போற்றுவோம்
நட்பை இருப்போம்; நட்போடு வாழ்வோம் !
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008
உன் தோழனாக ஓர் சிந்தனை
நம் நட்பிலே ஒரு சிறு
இடைவெளி இதற்கு காரணம்
என் பணியா ? ஏதேனும் சதியா ?
இல்லை என் மதி தான் ! ஆம்.
உனக்கு தொல்லை தரக்கூடாது
என்று சொன்னது என் மதி ;
அதனை தயக்கத்துடன் உன் நலனுக்காக
ஏற்றது என் நெஞ்சம்
உனது நெஞ்சம் ஏற்காது நான் அறிவேன்
அதனிடம் உன் மதியுடன் கலந்து
உரையாட சொல் சில நிமிட
மௌனத்தில் என் நட்பை உணர்வாய்
உன் தோழனாக என்றும் !!!
