நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜூன், 2009

பிரியா விடை !!!

சிற‌குக‌ள் முளைத்த‌த‌னால்
ப‌ற‌ந்து சென்றாயா ?
இல்லை சிக‌ர‌ம் தொட‌ தானே !
உன்னை பிரியும் போது
பெரிதாய் தெரிந்த‌ உல‌க‌ம் ...
உன்னை காண‌
எண்ணும் போது க‌டுகான‌தே...

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

உன்னையே மறந்தேன் !

காதலிக்கும் போது என்னை மறந்தவன் ,

கவிதையாய் கிறுக்கும் போது உன்னை மறந்தேன் ;

பதறாதே ! நான் கிறுக்குவது தோழியைப் பற்றியது ;

காதலிப்பவள் தோழியைவிட சிறியவளா ?

என வினவலாம் ;

நீ தோழியாய் தோள் கொடுத்ததை விட

காதலியாய் என் காதினைப் பிடித்து சினுங்கியதே

நினைவிற்கு வருகிறது நான் என்ன செய்வேன் !

காதலை சொல்லும் முன் உன் தோழியுடன்

பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;

உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன்

பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் ;

நட்பு தான்

காதலில் உன் உயிரை பறிகொடுப்பாய்

நட்பில் அதனை விட்டுக் கொடுக்க முடியும் ;

காதலில் கனவையும் வீணடிப்பாய்

நட்பில் சாகும் வரை சலிக்கமட்டாய் - வாழ்வதற்கு ;

அடுத்தவன் காலில் விழும் தருணத்தைத்

தாங்கிப் பிடிக்கும் நட்பு - ஆனால்

மானங் கெட வைத்து விடும் காமங் கொண்ட காதல் ;

காலத்தின் காலினை வாரிவிட்டு காலனைக்

கதவின் முன் நிறுத்தும் காதலைக் காதலும் கேட்காதே ;

நலம் கொழிக்கும் நடப்பினை போற்றுவோம்

நட்பை இருப்போம்; நட்போடு வாழ்வோம் !

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உன் தோழனாக ஓர் சிந்தனை

நம் நட்பிலே ஒரு சிறு

இடைவெளி இதற்கு காரணம்

என் பணியா ? ஏதேனும் சதியா ?

இல்லை என் மதி தான் ! ஆம்.

உனக்கு தொல்லை தரக்கூடாது

என்று சொன்னது என் மதி ;

அதனை தயக்கத்துடன் உன் நலனுக்காக

ஏற்றது என் நெஞ்சம்

உனது நெஞ்சம் ஏற்காது நான் அறிவேன்

அதனிடம் உன் மதியுடன் கலந்து

உரையாட சொல் சில நிமிட

மௌனத்தில் என் நட்பை உணர்வாய்

உன் தோழனாக என்றும் !!!