வெள்ளி, 25 ஜூன், 2010

வல்லவன்

உம்மை யாம் பார்த்ததும் இல்லை,
உன்னுடன் பேசியதும் இல்லை ,
நீ பேச நான் கேட்டதும் இல்லை ;

என்னை உன் சிந்தனை கவர்ந்தது ,
உன் எழுத்துக்கள் வீழ்த்தியது ,

இன்று புலவன் என்பவரின்,
ஐயம் தீர்த்த ஐயன் நீ ;

எம் தாய் மொழி இன்று செம்மொழி
அதனை நன் மொழியாக்கியவன் நீ ;

நீ சொல்லிடாத தலைப்புக்கள் இல்லை ,
அதை புகழ்ந்திடாத நாவும் இல்லை ,
அதனை எதிர்திடும் சமயம் உண்டோ !

உன் எழுத்தின் சுவை அறிய ,
தமிழை அறிந்தனர் அறிஞர் பலர் ,
தமிழின் வலிமை ஏற்றிய வல்லவன் நீ,
உன்னை வள்ளுவன் என்பவன் நான் ;

நான் தமிழன் என்ற கர்வத்தை விட ,
நீவீர் தமிழன் என்பதில் பெருமை
கொள்ளும் சாமான்யன் ;

உன்னை பெருமைபடுத்த
நான் கூறும் வார்த்தை
உன் புகழின் முன் சிறுமையே !

இது உமக்கு என் சமர்ப்பணம் ,
என்றும் தமிழில் உண்டு
உனக்கு ஓர் சிம்மாசனம் !

செவ்வாய், 1 ஜூன், 2010

அரசியல் , அரசியலா

அரசியல் ,
அரிசியிலும் வந்தாச்சு ,
குழைத்திடும் குரனையாய் ;
படிப்பிலும் புகுந்தாச்சு ,
கொட்டிடும் தேளாய் ;
மக்களும் ஏமாந்தாச்சு,
தேர்தல் எனும் பெயரால் ;
கட்சியும் மாறியாச்சு ,
காட்சியில் மாற்றம் இல்லை ;
சொற்கள் பல கேட்டாச்சு ,
பொருள் ஏதும் விளங்க வில்லை ;


அரசியல் ,
அரசால் இயலும் ;
என்ற நம்பிக்கை ,
அரசியலா? ,
அரசால் இயலுமா ?
என்று சிதைந்தாச்சு ;


அரசியலா ,
பலரும் இதை பேசியாச்சு ,
எங்கும் இல்லை முன்னேற்றம் ;
ரொம்பவும் ஏங்கியாச்சு ,
எங்காவது எதிலாவது
வருமா முன்னேற்றம் !

ஞாயிறு, 30 மே, 2010

மாற்றம்

மாற்றத்தினால் ,
சிலருக்கு ஏமாற்றம் ,
சில சமயம் தடுமாற்றம் ;

மாற்றம்,
மாற்றிடுமே சிலரது தோற்றத்தை,
பெற்றிடுமே சிலருக்கு ஏற்றத்தை ;

மாற்றத்தினால்,
மாறலாம் நமது சுற்றம் ,
மாறிவிடும் வாழ்வின் ஓட்டம் ;

மாற்றம் ,
மாற்றிடுமே அனைத்தையும் ஆனால் ,
மாற்றம் என்றுமே மாறாதது ;

வியாழன், 6 மே, 2010

என் உயிரானவள் !

வெகு தூர இரயில் பயணம் ,
எனக்கு பயணம் புதிதல்ல ,
தூரம் கண்டு அச்சம் இல்லை ,
சற்று சலனம் நீ இன்றி பயணிக்க ;
உன்னை அறிந்த பின்பு !

என் பாதையில்
முட்கள் இருப்பினும்
என்னுடன் வர சம்மதித்தாய் !

இனி நீ இன்றி
வாழ்க்கை பயணிப்பதில்
அர்த்தம் யாம் அறியேன் ,

உன்னை அறியும் முன்பும் பயணித்தேன்
உன்னை காணும் நாளை எண்ணி ,
அதில் ஓர் சுகம் !

இன்று உன்னை நினைத்து
பயணிக்கையிலும் ஒரு சுகம்
ஆனால் அதனை உணர மறுக்கிறேன் !

கடவுள் இல்லை என்றில்லை,
இருந்தால் சுகம், என்று
உரைக்கு மாற்றுரை வழங்க
நான் நாத்திகன் இல்லை !

இருக்கும் இருக்கலாம்
என்று மூடனாய் நம்பிக்கை
கொள்ள ஆத்திகனும் இல்லை !

உயிர் உள்ள வரை
இதய துடிப்பு
நீ உள்ள வரை நான் !
என்றிருக்கும்
எனக்கு உயிரானவள் நீ !

சனி, 17 ஏப்ரல், 2010

பெருமை !!!

எந்தன் பெயரை உரிமையுடன்

நீ அழைத்ததோ அருமை !

உந்தன் தோழி எனை யார்

என்கையில் நீ புன்னகைத்ததும்

என் நெஞ்சில் ஓர் பெருமை !!

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இனிமை

எந்தன் கைபேசியின் கை வந்து,

வாய் அடைக்கும் வரை பேச சொல்லுது

அவளது குரலின் இனிமை !

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வினாவானேன் !

காதல் என்பது என்னுள்
கேள்வியாக இருந்த போது,
விடையாய் வந்தாய் !

பலர் எனை எதிர்த்தனர்
நான் உன்னை
எதிர் பார்த்தால் !

உன்னை கண்டதும்
எனை இழந்தேன்
என்னிடமிருந்து !

அன்று உன்னால் லயித்த
காரணம் என்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீ இருப்பதால் !

எதிர்பார்க்கவில்லை நீ
எனை பிரிவாய் என , கனவிலும்
காணவில்லை !

இன்று என்னை பிரிந்த
காரணம் உன்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீயே சென்ற பின் ;

வாழ்வின் விடை கண்ட பின்
என்னை அதன் வினாவாக்கினாய்
என்னுள் நானே வினாவானேன் !