மனம் விரும்பி இழப்பதா?
இழந்ததை நினைக்காமல் இருப்பதா?
இழந்ததை தாங்கும் சக்தியா?
புண்ணியத்தின் தேடலா?
கண்ணியத்தின் காணலா?
மனம் விரும்பி இழப்பதா?
இழந்ததை நினைக்காமல் இருப்பதா?
இழந்ததை தாங்கும் சக்தியா?
புண்ணியத்தின் தேடலா?
கண்ணியத்தின் காணலா?
அளவுக்கு மிஞ்சிவிடில்
அமிர்தமும் நஞ்சாகுமே !
உந்தன் மீது நான் வைத்த
அளவினை கடந்த அன்பு
என்னுள் நான் என்ற
அகந்தையினை நசுக்கி விட்டது !
நான் வைத்த அன்பு
உந்தன் மேல் என்பதால்
அளவுகோலும் அளப்பதை மறந்தது !
யாதும் ஊரே யாவரும் கேளிர் ,
சொன்னது யாரு அதை புரிவது யாரு
நாம் மட்டும் அதை அறிந்தோமா
இல்லை புரிந்தோமா ?
ஆனால் வாழ்தோம்
கேளிக்கையுடன் கேளிராய் ,
சண்டை போட்டு சகோதரனாய்
சச்சரவுகள் இருந்தும்
நாம் மாமன் மச்சான்கள் !
கல்லூரி சாலையில் நாம்
கால் பதித்து,
எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்
எட்டு திக்கும் அதன் நினைவுகள்
மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;
நினைவுகள் நினைப்பதற்கே ,
சுகமான கல்லூரி நினைவுகளை
இந்நாளில் எந்நாளும் நினைத்து
கொண்டாடுவோம் குதூகலிப்போம்!
(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )