வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தோழியிடம் !!!

தாய்க்கு பின்னும்
தாரத்திற்கு முன்னும், என்றும் !
தாயின் அரவணைப்புடன்
என்னவளின் கண்டிப்புடன்
என்னை வழி நடத்தும் சுடராய் !

எனக்கு தோள் கொடுக்க தோழர்கள்
பலர் இருப்பினும் ,
விரக்தியினில் எனையறியாமல்
வரும் கண்ணீர் துடைக்க
ஓர் கை - உந்தன் கை வேண்டும் எனக்கு !

எனது கோரிக்கைகளை மட்டும்
சொல்கிறேன் என்றில்லை ,
தோழியை நேசித்து அவளிடம்
யாசிக்கும் தோழன் இவன் !
தந்தையாய் பாதுகாத்து தாயுமானவனாய்
அனைத்துமாய் தோழனுமாய் இருப்பேன் !

காதலர் தினத்தினில்
என் நட்பை காதலிப்பாயாக
இதுவும் ஓர் தோழனின் யாசகம்
என் தோழியிடம் !!!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எவரும் இலர் !

என் பார்வை சிதறியதால்
உன்னை கண்டேன் என்றிருந்தேன் ,
ஆயின் ,
என்னை நினைக்க தவறியது
என் உள்ளம், உன்னால் கவர்ந்து ;

பல கோடி கவிதைகள் சிதறியது
என்னிடம், - உனக்காக ;
அதை படித்ததும் பதறலாம்,
இக்கிறுக்க‌னின் கவிதையும்
பல கவிஞர்களின் கவிதை
போல் உள்ளதென !

இருக்கலாம், நான் ஒன்றும்
தமிழ் அறிஞன் அல்ல
நான் உன்னை அறிந்தவன் ;

அவர்களை போல் நானும்
காதலை சொல்லி இருக்கலாம் ;
ஆனால்
என்னை போல் உன்னை காதலிக்க
எவரும் இலர் !

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கொண்டாடுவோம் !

வெற்றி என்ற போதையை

தலைக்கு ஏற்றாமல் ,

தோல்வியின் தாக்கத்தில்

தடம் புரளாமல் ,

காதல் என்ற இளஞ்சாரலில்

இளைப்பாறினால் தவறேது ;

நட்புடன் நடை போட்டாலும் ,

பிறந்து விட்டோம் என்று வாழாமல் ,

வாழ்வதற்கே பிறந்தோம் ,

அதுவும் வெல்வதற்கே ! என்று

வாழ்வினை கொண்டாடுவோம் !

வியாழன், 28 ஜனவரி, 2010

கற்போம் !!!

சரித்திரம் படிக்க கற்றோம்,
அதனை படைக்க கற்போம்;

இயற்கையை ரசிக்க கற்றோம்,
அதனை பாதுகாக்க கற்போம்;

வாழ்க்கையை வாழ கற்றோம்,
அதனை வெல்ல கற்போம்;

எதிரியை மன்னிக்க கற்றோம்,
துரோகியை மறக்க கற்போம்;

காதலியை நேசிக்க கற்றோம்,
காதலை சுவாசிக்க கற்போம்;

கற்றதோ கடுகளவு , கற்க வேண்டியவை
கடலளவு ஆயினும் கற்போம் !!!

திங்கள், 25 ஜனவரி, 2010

பயணங்கள் முடிவதில்லை !!1

இரயில் சிநேகிதமும்
ஓர் மலரன்றோ !
ஏனெனில் அவை வெகு காலம்
இருப்பதில்லையே !

மலர்களிலே குறிஞ்சி மலரும்
இருப்பது போல் ,
இரயில் சிநேகிததில்
குறிஞ்சி மலரும் பூப்பதுண்டு !
அம்மலருக்கும் விட்டில் பூச்சியின்
வாழ்வே தான் !

என்றேனும் நட்பு எனும் பூ
மலர்ந்து விட்டால் என்றென்றும்
அந்த பயணங்கள் முடிவதில்லை !!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஒற்றை வார்த்தை !!!

உயிரே !
ஒற்றை வார்த்தை
கவிதையானது
உந்தன் பெயர் எனக்கு !

அன்பே !
என்னை முற்றிலும்
ஆக்கிரமித்த ஒற்றை
உயிர் நீயடி !

சகியே !
உலகினில் காதலை சொல்ல
வார்த்தைகள் பல தேவைப்படுகையில்
"காதலிக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை
போதுமடி எனக்கு !

ஆம் ,
நான் காதலிக்கிறேன்
என்ற போது,
உன்னை தவிர வேறு
யாராக தான் இருக்க முடியும் !

ஒற்றை வார்த்தையில்
என் ஒற்றை வாழ்க்கையை
சொல்லிவிடுகிறேன் "நீ" என்று !

புதன், 23 டிசம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும் !

ஈசனின் விளையாட்டால்
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !

உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !

உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !

காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !

நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;

உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!