ஞாயிறு, 30 மே, 2010

மாற்றம்

மாற்றத்தினால் ,
சிலருக்கு ஏமாற்றம் ,
சில சமயம் தடுமாற்றம் ;

மாற்றம்,
மாற்றிடுமே சிலரது தோற்றத்தை,
பெற்றிடுமே சிலருக்கு ஏற்றத்தை ;

மாற்றத்தினால்,
மாறலாம் நமது சுற்றம் ,
மாறிவிடும் வாழ்வின் ஓட்டம் ;

மாற்றம் ,
மாற்றிடுமே அனைத்தையும் ஆனால் ,
மாற்றம் என்றுமே மாறாதது ;

வியாழன், 6 மே, 2010

என் உயிரானவள் !

வெகு தூர இரயில் பயணம் ,
எனக்கு பயணம் புதிதல்ல ,
தூரம் கண்டு அச்சம் இல்லை ,
சற்று சலனம் நீ இன்றி பயணிக்க ;
உன்னை அறிந்த பின்பு !

என் பாதையில்
முட்கள் இருப்பினும்
என்னுடன் வர சம்மதித்தாய் !

இனி நீ இன்றி
வாழ்க்கை பயணிப்பதில்
அர்த்தம் யாம் அறியேன் ,

உன்னை அறியும் முன்பும் பயணித்தேன்
உன்னை காணும் நாளை எண்ணி ,
அதில் ஓர் சுகம் !

இன்று உன்னை நினைத்து
பயணிக்கையிலும் ஒரு சுகம்
ஆனால் அதனை உணர மறுக்கிறேன் !

கடவுள் இல்லை என்றில்லை,
இருந்தால் சுகம், என்று
உரைக்கு மாற்றுரை வழங்க
நான் நாத்திகன் இல்லை !

இருக்கும் இருக்கலாம்
என்று மூடனாய் நம்பிக்கை
கொள்ள ஆத்திகனும் இல்லை !

உயிர் உள்ள வரை
இதய துடிப்பு
நீ உள்ள வரை நான் !
என்றிருக்கும்
எனக்கு உயிரானவள் நீ !

சனி, 17 ஏப்ரல், 2010

பெருமை !!!

எந்தன் பெயரை உரிமையுடன்

நீ அழைத்ததோ அருமை !

உந்தன் தோழி எனை யார்

என்கையில் நீ புன்னகைத்ததும்

என் நெஞ்சில் ஓர் பெருமை !!

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இனிமை

எந்தன் கைபேசியின் கை வந்து,

வாய் அடைக்கும் வரை பேச சொல்லுது

அவளது குரலின் இனிமை !

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வினாவானேன் !

காதல் என்பது என்னுள்
கேள்வியாக இருந்த போது,
விடையாய் வந்தாய் !

பலர் எனை எதிர்த்தனர்
நான் உன்னை
எதிர் பார்த்தால் !

உன்னை கண்டதும்
எனை இழந்தேன்
என்னிடமிருந்து !

அன்று உன்னால் லயித்த
காரணம் என்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீ இருப்பதால் !

எதிர்பார்க்கவில்லை நீ
எனை பிரிவாய் என , கனவிலும்
காணவில்லை !

இன்று என்னை பிரிந்த
காரணம் உன்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீயே சென்ற பின் ;

வாழ்வின் விடை கண்ட பின்
என்னை அதன் வினாவாக்கினாய்
என்னுள் நானே வினாவானேன் !

செவ்வாய், 16 மார்ச், 2010

உனக்காக பிறந்தவன் !

காதல் என்பது உணர்வாயினும்
என் உயிரில் கலந்தாய் ;

கலந்தது என் உயிர் என்றாலும்
என் நினைவில் நிறைந்தாய் ;

நினைவில் நிறைந்திருப்பினும்
என் கண்கள் உனையே தேடின;

கண்கள் உன்னை தேடுகையில்
என் உதடுகள் உன் பெயரையே உச்சரித்தன ;

உதடுகள் பெயரை உச்சரிக்கையில்
என் கைகள் இதனை சிதறின நீ படிப்பாய் என ;

நீ இதனை படிக்கையில்
என்னை அறிந்திருப்பாய் ;

அறிந்ததும் உணர்ந்திருப்பாய்
உனக்காக பிறந்தவன் என்று !

சனி, 6 மார்ச், 2010

ரசிகன் ஆனேன் !

வழி மீது விழி வைத்தேன் ,
அவள் வருகைக்கு !
என் விழி எங்கும் அவள் பிம்பம் ;

சற்றே கவனித்தேன் ,
அவள் பாதம் படவே வழியும்
எங்கும் ஏங்கி இருந்தது !

வியந்தேன், மகிழ்ந்தேன் !

அவள் வருகைக்கு காத்திருந்த
நிமிடமும் யுகமானது ஆயினும்
அந்த யுகம் முழுவதும்
அவளை நினைத்து கொண்டிருப்பதால்
அதையும் ரசித்தேன் !

ரசிகன் ஆனேன் !