வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தோழியிடம் !!!

தாய்க்கு பின்னும்
தாரத்திற்கு முன்னும், என்றும் !
தாயின் அரவணைப்புடன்
என்னவளின் கண்டிப்புடன்
என்னை வழி நடத்தும் சுடராய் !

எனக்கு தோள் கொடுக்க தோழர்கள்
பலர் இருப்பினும் ,
விரக்தியினில் எனையறியாமல்
வரும் கண்ணீர் துடைக்க
ஓர் கை - உந்தன் கை வேண்டும் எனக்கு !

எனது கோரிக்கைகளை மட்டும்
சொல்கிறேன் என்றில்லை ,
தோழியை நேசித்து அவளிடம்
யாசிக்கும் தோழன் இவன் !
தந்தையாய் பாதுகாத்து தாயுமானவனாய்
அனைத்துமாய் தோழனுமாய் இருப்பேன் !

காதலர் தினத்தினில்
என் நட்பை காதலிப்பாயாக
இதுவும் ஓர் தோழனின் யாசகம்
என் தோழியிடம் !!!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எவரும் இலர் !

என் பார்வை சிதறியதால்
உன்னை கண்டேன் என்றிருந்தேன் ,
ஆயின் ,
என்னை நினைக்க தவறியது
என் உள்ளம், உன்னால் கவர்ந்து ;

பல கோடி கவிதைகள் சிதறியது
என்னிடம், - உனக்காக ;
அதை படித்ததும் பதறலாம்,
இக்கிறுக்க‌னின் கவிதையும்
பல கவிஞர்களின் கவிதை
போல் உள்ளதென !

இருக்கலாம், நான் ஒன்றும்
தமிழ் அறிஞன் அல்ல
நான் உன்னை அறிந்தவன் ;

அவர்களை போல் நானும்
காதலை சொல்லி இருக்கலாம் ;
ஆனால்
என்னை போல் உன்னை காதலிக்க
எவரும் இலர் !

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கொண்டாடுவோம் !

வெற்றி என்ற போதையை

தலைக்கு ஏற்றாமல் ,

தோல்வியின் தாக்கத்தில்

தடம் புரளாமல் ,

காதல் என்ற இளஞ்சாரலில்

இளைப்பாறினால் தவறேது ;

நட்புடன் நடை போட்டாலும் ,

பிறந்து விட்டோம் என்று வாழாமல் ,

வாழ்வதற்கே பிறந்தோம் ,

அதுவும் வெல்வதற்கே ! என்று

வாழ்வினை கொண்டாடுவோம் !