ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மன்னர்கள் ஆவோம் !

நிஜங்களுக்கு அதன் நிழலே சாட்சி !
நம் நினைவுகளுக்கோ உதடுகள்
பிளந்து பூக்கும் புன்னகை தான் !
புன்னைகை மன்னர்கள் ஆவோம் !
சிரித்து வாழ்வோம் !!!

புதன், 20 ஆகஸ்ட், 2008

பொறுப்பில்லாதவன்

இவ்வுலகத்தினை ஒரு நொடி நினைத்திட

உள்ள விஷயங்களோ பல கோடி ;

இன்றைய விலைவாசி உயர்வினில்

என் ஒரு நொடியின் விலையோ பல கோடி ;

அலைகிறேன்! என் நிலை தேடி ,

பின் எப்படி கிடைக்கும் நாட்டை நினைத்திட

ஒரு நொடி ! .....

என்னை பொறுப்பில்லாதவன் என்றனர்

தன் நிலை அறியாமல் தெருக்கோடியில்

நின்றோர் !!!

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

குறை

காதலை அனுபவித்தவர் பலர் ,
சற்று வித்தியாசத்திற்கு அதனை
ஆராய முயற்சிக்கிறேன் !
காதலால் தோற்று வெறுமை ஆனவர்
உண்டோ ? என்பதற்கு உண்டு !
இதனைச் சொல்பவர் இல்லாமல் இல்லை
அவர்களுக்கு இதோ ,
காதலால் நிச்சயம் இருக்க‌ முடியாது;
நீ நேசிப்பவரால் இருக்கலாம்
ஏனெனில் காதல் குற்றம் அறியாது,
பயமும் அறியாது ;
காதலில் தோல்வி அடைய பரீட்சை இல்லை ,
உணரும் உணர்ச்சியாகும் , உணர முடியவில்லை எனில்,
உன்னில் தான் குறை
பின்பு காதலை குறை சொல்வது ஏன் ?

மொழி

ஒரு கவிதையினை எழுதுவதற்கு

பல வார்த்தைகளை தேடி தவித்த நான் ,

உன்னுடன் பேசும் போது தவித்ததில்லை , ஆம்

மௌனமே மொழியானது !

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

தாய் மண்ணே வணக்கம் !!!

என்னவளே !!!
நீ புன்னகைத்தாலும்,
இல்லை புறக்கணித்தாலும் ;
இறுதியில் ஆறடி மண்ணை முத்தமிட்டாலும்,
இல்லை சாம்பலாய்
தீக்கு இறையாகினாலும்;
தாய் மண்ணே என்னை தாங்க போகிறாள்
எனவே என்றும் உனக்காக எழுதியவன்
இன்று தாய் மண்ணுக்கு வைக்கிறேன்
என் வீர வணக்கங்களை !!!
தாய் மண்ணே வணக்கம் !!!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

பாராட்டு

என் இரவும் நீண்டது ,

என் எழுத்தும் தொடர்ந்தது ,

சிந்தனை சிறகடித்தது ,

படித்துவிட்டு பாராட்டுக்கள் பறந்தன ;

ஆனால் நான் பெரிதும் விரும்பும்

உனது பாராட்டு எனக்கு இல்லை

ஏனெனில் நான் எழுதியது

உன் பிரிவைப் பற்றித் தானே !!!

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

உன்னையே மறந்தேன் !

காதலிக்கும் போது என்னை மறந்தவன் ,

கவிதையாய் கிறுக்கும் போது உன்னை மறந்தேன் ;

பதறாதே ! நான் கிறுக்குவது தோழியைப் பற்றியது ;

காதலிப்பவள் தோழியைவிட சிறியவளா ?

என வினவலாம் ;

நீ தோழியாய் தோள் கொடுத்ததை விட

காதலியாய் என் காதினைப் பிடித்து சினுங்கியதே

நினைவிற்கு வருகிறது நான் என்ன செய்வேன் !

காதலை சொல்லும் முன் உன் தோழியுடன்

பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;

உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன்

பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் ;

நட்பு தான்

காதலில் உன் உயிரை பறிகொடுப்பாய்

நட்பில் அதனை விட்டுக் கொடுக்க முடியும் ;

காதலில் கனவையும் வீணடிப்பாய்

நட்பில் சாகும் வரை சலிக்கமட்டாய் - வாழ்வதற்கு ;

அடுத்தவன் காலில் விழும் தருணத்தைத்

தாங்கிப் பிடிக்கும் நட்பு - ஆனால்

மானங் கெட வைத்து விடும் காமங் கொண்ட காதல் ;

காலத்தின் காலினை வாரிவிட்டு காலனைக்

கதவின் முன் நிறுத்தும் காதலைக் காதலும் கேட்காதே ;

நலம் கொழிக்கும் நடப்பினை போற்றுவோம்

நட்பை இருப்போம்; நட்போடு வாழ்வோம் !

விழித்தெழு தோழா !

ஏன் ? என்று கேட்டுவிட்டால் புரட்சி ;
நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் வளர்ச்சி ;
நமக்கு இல்லையே தளர்ச்சி !
தாயின் தலைமகன் என்ற தலைகனத்தை
தகர்த்திவிட்டு தாய்நாட்டை தலை நிமிர்துவோம் வா !
சாதிகள் இல்லையென்ற அறைகூவல் எதற்கு ?
அதனையே ஒழித்துவிடுவோம் வா !
அரசியல் அதிகாரத்திற்கென்று ஆக்கிவிட்டார்கள் ;
அதனையும் அழித்து அகராதி படைப்போம் வா !
காதலில் கால் பதிக்க காலம் பல உள
கங்கை காவிரி கரையை விரிய செய்வோம் வா !
சாதிக்கொரு கட்சி ! மக்கள் நிலைமையோ வறட்சி
வீதிக்கொரு கழகம் ! நமக்கோ கலகம் தான் மிச்சம்
நமது சுதந்திரம் சுற்றித் திரியவா ?
நாட்டில் சுக்கிர திசை வீசுவதற்கே !
பாதையோ வழி மாறுகிறது ; இனி
விழிக்கவில்லை என்றால் பாலைவனத்தில் தான் பாடை ;
உலகம் அதிவேகத்தில் சுழல்கிறது; இனி
வேகமாக நடந்து பயனில்லை !
பறக்க கற்றுக் கொள்வோம் !
தொடங்கிவிட்டோம் இனி நாம் நிற்பது
வெற்றி இலக்கில் தான் !
அறிந்தவற்றை புரிந்து கொள் !

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உன் தோழனாக ஓர் சிந்தனை

நம் நட்பிலே ஒரு சிறு

இடைவெளி இதற்கு காரணம்

என் பணியா ? ஏதேனும் சதியா ?

இல்லை என் மதி தான் ! ஆம்.

உனக்கு தொல்லை தரக்கூடாது

என்று சொன்னது என் மதி ;

அதனை தயக்கத்துடன் உன் நலனுக்காக

ஏற்றது என் நெஞ்சம்

உனது நெஞ்சம் ஏற்காது நான் அறிவேன்

அதனிடம் உன் மதியுடன் கலந்து

உரையாட சொல் சில நிமிட

மௌனத்தில் என் நட்பை உணர்வாய்

உன் தோழனாக என்றும் !!!

ஆசீர்வதித்தேன் !

என்னை அறியாமலே உன்னை
அறிவது போல் உணர்ந்தேன்;
நீ எனக்கானவள் என்பது உனக்கும்
புரிந்தது ; அது என் கனவில் தான் !
என் மனம் திறந்து காகிதத்தில்
ஆசையினை வார்த்தையாக்கி செதுக்கி
உன் விருப்பம் அறிய வந்தேன் ;
உன் அழகை பார்த்து வியந்தேன் - ஆம் உனது
மணமகள் கோல அழகை பார்த்து தான்
வேறென்ன செய்ய ?
நான் எழுதியது என்னுள் காவியம் என்றாலும்
இப்போ காகிதம் தான் அதனை
கிழித்து விட்டு வீசியெறிந்தேன்
ஆசீர்வதித்தேன் !