வியாழன், 7 ஆகஸ்ட், 2008

விழித்தெழு தோழா !

ஏன் ? என்று கேட்டுவிட்டால் புரட்சி ;
நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் வளர்ச்சி ;
நமக்கு இல்லையே தளர்ச்சி !
தாயின் தலைமகன் என்ற தலைகனத்தை
தகர்த்திவிட்டு தாய்நாட்டை தலை நிமிர்துவோம் வா !
சாதிகள் இல்லையென்ற அறைகூவல் எதற்கு ?
அதனையே ஒழித்துவிடுவோம் வா !
அரசியல் அதிகாரத்திற்கென்று ஆக்கிவிட்டார்கள் ;
அதனையும் அழித்து அகராதி படைப்போம் வா !
காதலில் கால் பதிக்க காலம் பல உள
கங்கை காவிரி கரையை விரிய செய்வோம் வா !
சாதிக்கொரு கட்சி ! மக்கள் நிலைமையோ வறட்சி
வீதிக்கொரு கழகம் ! நமக்கோ கலகம் தான் மிச்சம்
நமது சுதந்திரம் சுற்றித் திரியவா ?
நாட்டில் சுக்கிர திசை வீசுவதற்கே !
பாதையோ வழி மாறுகிறது ; இனி
விழிக்கவில்லை என்றால் பாலைவனத்தில் தான் பாடை ;
உலகம் அதிவேகத்தில் சுழல்கிறது; இனி
வேகமாக நடந்து பயனில்லை !
பறக்க கற்றுக் கொள்வோம் !
தொடங்கிவிட்டோம் இனி நாம் நிற்பது
வெற்றி இலக்கில் தான் !
அறிந்தவற்றை புரிந்து கொள் !

கருத்துகள் இல்லை: