செவ்வாய், 24 நவம்பர், 2009

நாமும் மனிதர்கள் !

முகத்தின் முன் கை கட்டி,
முதுகின் பின் கை நீட்டி ,
யாசகமாய் வரும் மரியாதை ,

தோழமை என்று சொல்லி
தோளிலே கை போட்டு
கழுத்தினை நெரிக்கும்
நட்புக்கு சமம் ,

கற்பில்லா நடப்பும் ,
நேர்மையில்லா மரியாதையும்
இருந்தென்ன பயன் ?

நட்பு இல்லாவிட்டால் தவறேதுமில்லை
நாமும் மனிதர்களே !
ஆனால் அன்புடன் இருக்க வேண்டும்
நாமும் மனிதர்கள் என்று
நிரூபிக்கவே !

அன்புடன் பழகி ,
ஆதரவாய் இருப்போம் !

வாழ்க மனித நேயம் !

செவ்வாய், 17 நவம்பர், 2009

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

நேற்று போல் இன்று இல்லை

என்று வியந்தேன் !

இன்று போல் நாளை இருப்பதில்லை

என்பதை உணர்ந்தேன் !!

தடைகள் தடுமாற வைக்கும் ,

சிலர் நம்மை முதுகினில்

தட்டியும் கொடுப்பார்கள்;

தட்டியும் விடுவார்கள் !

முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;

ஒற்றை வாழ்வினை சற்றே

வாழ்ந்து தான் பார்ப்போமே !

வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து

அதன் வேட்க்கையை என்றும்

நம் நினைவில் வைத்து

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!