புதன், 23 டிசம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும் !

ஈசனின் விளையாட்டால்
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !

உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !

உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !

காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !

நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;

உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!

செவ்வாய், 1 டிசம்பர், 2009

சுயநினைவோடு சுயனலமானேன் !!

உன் அழகால் உன்னிடம்
நான் வீழ்ந்தேனா ?
இல்லை உன் முகம்
கண்டு வியந்தேனா ?

நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !

என் கால்கள் விரைந்தன
உந்தன் இடம் தேடி ;
என் இதயம் துடிக்கிறது
உன் நெஞ்சில் ஓர் இடம் நாடி !

நடக்கும் உன் பாதையில்
மலர் தூவ துடிக்கிறது - என் கரங்கள் ;
மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !

தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!

நண்பன் என்று நெகிழவில்லை ,
காதலன் என்று கர்வம் கொள்ளவில்லை ,
கணவனாக கனவு காண்கிறேன் ;

என்றாவது நீ கிடைப்பாய் என்றில்லை ,
என்றுமே நீ எனக்கே ! என்றே
கனவு கண்டு சுயநினைவோடு சுயனலமானேன் !!