வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு

புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது ;
குதூகலம் தொடர்ந்தன , உணர்ச்சிகள் உருவெடுத்தன ;
எதிர்ப்புகள் இல்லாத எதிர்பார்ப்பு வளர்ந்தது ;
இலக்குகள் இதமாக தெரிந்தன ;
முதல் நாள் முடிந்து, வருடம் தொடங்கியது ;
நாட்கள் நகர்ந்தது, மாதங்கள் மலர்ந்தது ;
முன்னேற்றங்கள் தள்ளாட்டங்கள் பகிர்ந்தன ;
பக்குவம் வளர்ந்தது , புத்தாண்டு தின
உறுதி மொழிகள் கனவுகள் ஆனது ;
இதோ டிசெம்பரும் வந்தது ,
இத்தனை நாட்கள் நிமிடமாக கடந்தது ;
இம்மாதம் நொடியென கடப்பதில் ஐயம்யேது !
ஆம் , அடுத்த வருடம் துவங்கும் நேரம் ,
உறுதி மொழிகளை உறுதியுடன் ஏற்க தயார் ,
புதிய எதிர்பார்ப்புடன் புதிய வருடம் ஏற்க தயார் ,
பகிர்ந்தது புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது !

2 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

iniya puthaandu nalvaathukkal nanbaa...

un uruthimozhikal anaithum verum varthaikalaaka illaamal seyalaaka vetriyudan amaya vaazhthukkal...

Appadiye intha varudam nee ondril irunthu irandaaka aaka en vaazhthukkal... ;)

JSTHEONE சொன்னது…

irundu ellam aaga vendaam da nalla friend kidacha podhum... apuram uruhti mozhi ellam kashtam machan