வெள்ளி, 25 ஜூன், 2010

வல்லவன்

உம்மை யாம் பார்த்ததும் இல்லை,
உன்னுடன் பேசியதும் இல்லை ,
நீ பேச நான் கேட்டதும் இல்லை ;

என்னை உன் சிந்தனை கவர்ந்தது ,
உன் எழுத்துக்கள் வீழ்த்தியது ,

இன்று புலவன் என்பவரின்,
ஐயம் தீர்த்த ஐயன் நீ ;

எம் தாய் மொழி இன்று செம்மொழி
அதனை நன் மொழியாக்கியவன் நீ ;

நீ சொல்லிடாத தலைப்புக்கள் இல்லை ,
அதை புகழ்ந்திடாத நாவும் இல்லை ,
அதனை எதிர்திடும் சமயம் உண்டோ !

உன் எழுத்தின் சுவை அறிய ,
தமிழை அறிந்தனர் அறிஞர் பலர் ,
தமிழின் வலிமை ஏற்றிய வல்லவன் நீ,
உன்னை வள்ளுவன் என்பவன் நான் ;

நான் தமிழன் என்ற கர்வத்தை விட ,
நீவீர் தமிழன் என்பதில் பெருமை
கொள்ளும் சாமான்யன் ;

உன்னை பெருமைபடுத்த
நான் கூறும் வார்த்தை
உன் புகழின் முன் சிறுமையே !

இது உமக்கு என் சமர்ப்பணம் ,
என்றும் தமிழில் உண்டு
உனக்கு ஓர் சிம்மாசனம் !

6 கருத்துகள்:

MANESH சொன்னது…

thala.... ungaluku oru invite anupiraknum semmozi maanadu la irundhu:-)..... very nice js.... js vaazga tamiz valarga:-)

JSTHEONE சொன்னது…

Manesh... romba nanri... unga comment accept panra alavukku i will improve one day :) thnks for the encouragement

Allvin சொன்னது…

good one na..

JSTHEONE சொன்னது…

Allvin, Mikka nanri

Tivakar சொன்னது…

J therikkuthu..

Karthikha சொன்னது…

nice one :)