வியாழன், 12 மே, 2011

என்ன வாழ்க்க டா இது !!!

கடந்த கனமான காலம் ,
சிந்தித்திட சிறுதளவும் சிந்தனை இல்லை,
துளி கண்ணீர் சிந்தவும் திடம் இல்லை;
பிடித்தவரை பார்த்திட இடம் உண்டு ,
பார்த்தவரை பிடித்திட வழி உண்டு ,
பிடித்ததை சொல்லிட இடம் உண்டா ?
உன் நெஞ்சினில் நடப்பதை ஏற்றிட வலு உண்டா ?
சந்தித்து பேசிட சகாக்கள் ஆயிரம் ,
சட்டையில் சில்லறை சிரமம் ,

கடக்கும் கனா காலம்
சிந்திக்குறோம் சில்லறைகளுக்கு மட்டும் ,
சட்டையில் சில்லறைகள் உண்டு ,
சந்தித்து சிறகடிக்க சகாக்கள் ஒவ்வொரு திக்கிலும் ,
பிடித்ததை சொல்லிட திடமும்
இடமும் உண்டு , நேரம் இங்கேது நமக்கு !
என்ன வாழ்க்க டா இது !!!

கருத்துகள் இல்லை: