செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசையே அலை போலே!!!

கரை தேடி வருகிறாய்
கரை தொட்ட  பின்
நுரையாகி போகிறாய்
நீயும் என் தோழனே!

அடைந்துவிட்டோம் என்றாசை,
அடைந்ததும் நிராசையானது;

அறிந்தது கல்லளவு,
அறியாதது உலகளவு,
என்றதை உணர்ந்ததும்;
ஆசையே அலை போலே!!!