வியாழன், 28 ஜனவரி, 2010

கற்போம் !!!

சரித்திரம் படிக்க கற்றோம்,
அதனை படைக்க கற்போம்;

இயற்கையை ரசிக்க கற்றோம்,
அதனை பாதுகாக்க கற்போம்;

வாழ்க்கையை வாழ கற்றோம்,
அதனை வெல்ல கற்போம்;

எதிரியை மன்னிக்க கற்றோம்,
துரோகியை மறக்க கற்போம்;

காதலியை நேசிக்க கற்றோம்,
காதலை சுவாசிக்க கற்போம்;

கற்றதோ கடுகளவு , கற்க வேண்டியவை
கடலளவு ஆயினும் கற்போம் !!!

திங்கள், 25 ஜனவரி, 2010

பயணங்கள் முடிவதில்லை !!1

இரயில் சிநேகிதமும்
ஓர் மலரன்றோ !
ஏனெனில் அவை வெகு காலம்
இருப்பதில்லையே !

மலர்களிலே குறிஞ்சி மலரும்
இருப்பது போல் ,
இரயில் சிநேகிததில்
குறிஞ்சி மலரும் பூப்பதுண்டு !
அம்மலருக்கும் விட்டில் பூச்சியின்
வாழ்வே தான் !

என்றேனும் நட்பு எனும் பூ
மலர்ந்து விட்டால் என்றென்றும்
அந்த பயணங்கள் முடிவதில்லை !!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஒற்றை வார்த்தை !!!

உயிரே !
ஒற்றை வார்த்தை
கவிதையானது
உந்தன் பெயர் எனக்கு !

அன்பே !
என்னை முற்றிலும்
ஆக்கிரமித்த ஒற்றை
உயிர் நீயடி !

சகியே !
உலகினில் காதலை சொல்ல
வார்த்தைகள் பல தேவைப்படுகையில்
"காதலிக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை
போதுமடி எனக்கு !

ஆம் ,
நான் காதலிக்கிறேன்
என்ற போது,
உன்னை தவிர வேறு
யாராக தான் இருக்க முடியும் !

ஒற்றை வார்த்தையில்
என் ஒற்றை வாழ்க்கையை
சொல்லிவிடுகிறேன் "நீ" என்று !

புதன், 23 டிசம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும் !

ஈசனின் விளையாட்டால்
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !

உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !

உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !

காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !

நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;

உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!

செவ்வாய், 1 டிசம்பர், 2009

சுயநினைவோடு சுயனலமானேன் !!

உன் அழகால் உன்னிடம்
நான் வீழ்ந்தேனா ?
இல்லை உன் முகம்
கண்டு வியந்தேனா ?

நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !

என் கால்கள் விரைந்தன
உந்தன் இடம் தேடி ;
என் இதயம் துடிக்கிறது
உன் நெஞ்சில் ஓர் இடம் நாடி !

நடக்கும் உன் பாதையில்
மலர் தூவ துடிக்கிறது - என் கரங்கள் ;
மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !

தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!

நண்பன் என்று நெகிழவில்லை ,
காதலன் என்று கர்வம் கொள்ளவில்லை ,
கணவனாக கனவு காண்கிறேன் ;

என்றாவது நீ கிடைப்பாய் என்றில்லை ,
என்றுமே நீ எனக்கே ! என்றே
கனவு கண்டு சுயநினைவோடு சுயனலமானேன் !!

செவ்வாய், 24 நவம்பர், 2009

நாமும் மனிதர்கள் !

முகத்தின் முன் கை கட்டி,
முதுகின் பின் கை நீட்டி ,
யாசகமாய் வரும் மரியாதை ,

தோழமை என்று சொல்லி
தோளிலே கை போட்டு
கழுத்தினை நெரிக்கும்
நட்புக்கு சமம் ,

கற்பில்லா நடப்பும் ,
நேர்மையில்லா மரியாதையும்
இருந்தென்ன பயன் ?

நட்பு இல்லாவிட்டால் தவறேதுமில்லை
நாமும் மனிதர்களே !
ஆனால் அன்புடன் இருக்க வேண்டும்
நாமும் மனிதர்கள் என்று
நிரூபிக்கவே !

அன்புடன் பழகி ,
ஆதரவாய் இருப்போம் !

வாழ்க மனித நேயம் !

செவ்வாய், 17 நவம்பர், 2009

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

நேற்று போல் இன்று இல்லை

என்று வியந்தேன் !

இன்று போல் நாளை இருப்பதில்லை

என்பதை உணர்ந்தேன் !!

தடைகள் தடுமாற வைக்கும் ,

சிலர் நம்மை முதுகினில்

தட்டியும் கொடுப்பார்கள்;

தட்டியும் விடுவார்கள் !

முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;

ஒற்றை வாழ்வினை சற்றே

வாழ்ந்து தான் பார்ப்போமே !

வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து

அதன் வேட்க்கையை என்றும்

நம் நினைவில் வைத்து

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!