வியாழன், 22 மே, 2008

அன்புடன்

மறப்போம் ! மன்னிப்போம் !

என்று அறிவுரைத்தனர் ,

மன்னித்தால் தானே மறப்பதற்கு

என்று வாதிடுகின்றனர் !

மன்னித்து விடின் பகைவர்கள்

பங்காளிகள் ஆகின்றனர் !

மறந்து விடின் பகைவர்கள்

பண்புள்ளவர்கள் ஆகின்றனர் !

ஆனால் இக்கலி யுகத்தில்

மன்னிப்பவர்கள் மடையர்கள் என்றும்

மறப்பவர்கள் மதியற்றவர்கள் என்றும்

ஏசுகிறது இவ்வுலகம் ,

மனித நேயம் தடயம்

அற்று போனது !

எத்திசையும் தனதாக்கும்

மனிதனுக்கு இத்திசை எப்படித்தான்

பொருந்தும் ! அன்போடு

அனைவரையும் அரவணைப்போம் !

கருத்துகள் இல்லை: